NATIONAL

அமைச்சரவை அமைக்கும் முக்கிய கூட்டம் நாளை நடைபெறும்!!

11 மே 2018, 5:30 AM
அமைச்சரவை அமைக்கும் முக்கிய கூட்டம் நாளை நடைபெறும்!!

கோலாலம்பூர்,மே11:

நாட்டின் அமைச்சரவையை அமைக்கும் கூட்டம் நாளை நடைபெறும் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார்.

பாக்காத்தான் கூட்டணியின் முதன்மை தலைவர்களோடு கலந்து பேசிய பின்னர் நாளை அமைச்சர்கள் தேர்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

கட்சி ரீதியில் நேர்மையாகவும் நிறைவாகவும் அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து தரப்புடனான பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்தப்பின்னர் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றார்.

அதேவேளையில்,அரசு துறைகளின் தலைமை அதிகாரிகளை மாற்றும் விவகாரத்தில் நாங்கள் அவசரப்பட மாட்டோம் என்றும் துன் மகாதீர் கூறினார்.இருப்பினும்,22ஆண்டுகள் அனுபவத்தில் சிறந்த முறையில் நாட்டை வழிநடத்தும் அனுபவம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமராக பதவி ஏற்று அவர் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறினார்.அவரோடு டத்தோஸ்ரீ வான் அஸிசா,டான்ஸ்ரீ முகிடின் யாசின்,மாட் சாபு மற்றும் லிம் குவான் எங் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.