NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: அதிக வாக்காளர்கள் பதிவு, தேர்தல் மோசடிகளை முழுமையாக எதிர்கொள்ள முடியும்

9 ஏப்ரல் 2018, 7:29 AM
14-வது பொதுத் தேர்தல்: அதிக வாக்காளர்கள் பதிவு, தேர்தல் மோசடிகளை முழுமையாக எதிர்கொள்ள முடியும்

சுங்கை பூலோ , ஏப்ரல் 9:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் பதிவு எண்ணிக்கை 90% ஆக உயர்ந்தால் தேர்தல் மோசடிகளை முழுமையாக எதிர்கொள்ள முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தற்போது தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை என்ற போர்வையில் மோசடிகளை அம்னோ தேசிய முன்னணி செய்து வருகிறது என்றார்.

"  சிலாங்கூர் மாநில மக்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன், தேசிய முன்னணி மாநிலத்தை கைப்பற்ற எல்லா மோசடிகளை தயார் செய்து விட்டது. ஆகவே, நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை 90% ஆக உயர்ந்தால், தேசிய முன்னணியின் தேர்தல் மோசடிகளை எதிர்கொள்ள முடியும். அப்படி வாக்காளர்கள் எண்ணிக்கை பதிவு 50-இல் இருந்து 60 சதவீதமாக இருந்தால் மோசடிகள் வெற்றிகரமாக நடத்தி தேசிய முன்னணி வெற்றி பெற முடியும்," என்று  அஸ்மின் அலி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.