NATIONAL

தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை மார்ச் 28-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் !!!

22 மார்ச் 2018, 4:30 AM
தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை மார்ச் 28-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் !!!

கோலா லம்பூர், மார்ச் 22:

தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரைகள் எதிர் வரும் புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்ய இருக்கிறது என்று மக்களவையின் சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிக்கார் அமீன் மூலியா தெரிவித்தார். இன்றைய மக்களவையின் கேள்வி நேரத்தை தொடங்குவதற்கு முன் தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று வழங்கப் படும் என்றார்.

"  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகள் எதிர் வரும் மார்ச் 28 , புதன்கிழமை வரையில் ரகசியமாக வைக்க வேண்டும் என்று அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்," என்று சபாநாயகர் கூறினார்.

தகவல் : பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.