SELANGOR

குடிநீர் விநியோகம் 91.7% மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியது !!!

11 மார்ச் 2018, 4:26 AM
குடிநீர் விநியோகம் 91.7% மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியது !!!

ஷா ஆலாம், மார்ச் 11:

இன்று காலை வரை தடைப்பட்ட குடிநீர் விநியோகம் 91.7% மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியதாக சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனம் (ஷாபாஸ்) அறிக்கை வெளியிட்டது. உலு சிலாங்கூர் மற்றும் கோலா லங்காட் மாவட்டம் 100% மீீீீண்டும் விநியோகத்தை பெற்றுள்ளது.

மேலும் கிள்ளான் (97.3%), கோலா லம்பூர் (96.8%), கோம்பாக் (91.9%) மற்றும் பெட்டாலிங் (74.5%) போன்ற மாவட்டங்களிலும் வழக்க நிலைக்கு திரும்பியதாக ஷாபாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தாமான் பூச்சோங் பெர்டானா, தாமான் பூச்சோங் இண்டா, தாமான் இம்பியான் இண்டா, பிங்கீரான் புக்கிட் ஜாலில், தாமான் அமான் சாரி, தாமான் கியாரா, சுபாங் ஜெயா, எஸ்எஸ்12-எஸ்எஸ்19, ஹாயாட் சைவுஜானா, தெமாசா கிளன்மேரி, ஹாகோம் கிளன்மேரி, தாமான் தெனாகா மற்றும் புக்கிட் கூச்சாய் போன்ற இடங்களில் கட்டம் கட்டமாக விநியோகம் கிடைக்கும் என்று ஷாபாஸ் விவரித்துள்ளது.

 

 

 

 

 

பயனீட்டாளர்கள் அவசர குடிநீர் சேவைக்கு எஸ்எம்எஸ் மூலமாக எண் 15300 (Tanker<jarak>Nama & Alamat)

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.