NATIONAL

மரியா சின் பெர்சே தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்;14-வது பொது தேர்தலில் போட்டி !!!

6 மார்ச் 2018, 7:45 AM
மரியா சின் பெர்சே தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்;14-வது பொது தேர்தலில் போட்டி !!!

பெட்டாலிங் ஜெயா, மார்ச்

மரியா சின் தனது பெர்சே 2.0-இன் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சுயேச்சை நாடாளுமன்ற வேட்பாளராக தம்மை அறிவித்து உள்ளார்.

"  பெர்சே 2.0 தலைமை பொறுப்பில் இருந்து விலகி செல்வது, புதிய சவால்கள் எதிர்க் கொள்ளவே ஆகும். அரசியல் உலகில் கால் பதித்து நாட்டில் ஜனநாயக நடைமுறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நான் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருப்பது, எனக்கு முழு சுதந்திரத்தைக் கொடுக்கும். இதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப போராட முடியும். பாக்காத்தானை தேர்ந்தெடுத்தாலும் நான் சுயேச்சை வேட்பாளராகவே இருக்க விரும்புகிறேன். எனது முழு கவனமும் மாற்றங்களை ஏற்படுத்துவதில் இருக்கும்," என்று தமது அறிக்கையில் கூறினார்.

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.