NATIONAL

1எம்டிபி : மலேசிய அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கை எங்கே?

2 மார்ச் 2018, 8:21 AM
1எம்டிபி : மலேசிய அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கை எங்கே?
1எம்டிபி : மலேசிய அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கை எங்கே?

ஷா ஆலம், மார்ச் 2:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பிரபல தொழில் அதிபர் ஜோ தேக் லோ அல்லது ஜோ லோவிடம் சமரசம் செய்ய முயற்சி செய்தார் என்றும் 1 மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) வழக்கை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார் என்று வெளியான செய்தியை உறுதிப் படுத்தினார் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். இது வரையில் மலேசிய அதிகாரிகள் 1எம்டிபி சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவரித்தார்.

"  இகுவானிமிட்டி சொகுசு கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் 1எம்டிபி ஊழல் மீண்டும் அம்பலமாகி உள்ளது. உலக நாடுகளின் அதிகாரிகள் 1எம்டிபி மீது நடவடிக்கை எடுத்த பிறகும் மலேசிய காவல்துறை அதிகாரிகள் ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ?", என்று கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

ஏற்கெனவே வோல் ஸ்டிரீட் ஜேர்னல் 1எம்பி சம்பந்தமாக புதிய குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளதை மேற்கோள்காட்டி இவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.