NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: மஇகா தேசிய தலைவர் உலு சிலாங்கூருக்கு ஓட்டம்!!!

3 பிப்ரவரி 2018, 10:35 AM
14-வது பொதுத் தேர்தல்: மஇகா தேசிய தலைவர் உலு சிலாங்கூருக்கு ஓட்டம்!!!

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 3:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஇகாவின் வேட்பாளர்கள் பட்டியலில் பெரும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று ஃபிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மஇகாவின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பரமணியம் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து உலு சிலாங்கூர் தொகுதிக்கு மாற்றலாகி வருகிறார் என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13-வது பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதிக்கட்சியின் வேட்பாளரான சுவா ஜூய் மெங்கை 1,217 வாக்குகளில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனாலும், தற்போதைய மக்கள் நீதிக்கட்சியின் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரான டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா களத்தில் இறங்கி வேலை செய்து வருவதால், வெற்றி பெறுவது கடினம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில், புத்ரா ஜெயா தலைமைத்துவத்தை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி  கையில் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மஇகா, வேட்பாளர்களை மாற்றும் திட்டத்தை எடுத்துள்ளது தோல்வி முகத்தில் இருப்பதைக் காட்டுகிறது என்றால் அது மிகையாகாது.

தகவல்: ஃபிரி மலேசியா டுடே

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.