ஷா ஆலம், ஜனவரி 22:
சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் (யுனிசெல்) இலவச கல்விக்கான பதிவுகள் எதிர் வரும் பிப்ரவரி 3 வரை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று யுனிசெல்-இன் தொழில்முறை தொடர்பு பிரிவு தலைவர் இயக்குனர் ஹாஸ்ரீல் அபு ஹாசான் கூறினார். யுனிசெல் அடிப்படை கல்வி அல்லது மெட்ரிகுலேசன் டெர்மா சிஸ்வா திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கி வருகிறது என்று விவரித்தார்.
" மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்பிஎம்) மற்றும் மலேசிய உயர் கல்வி சான்றிதழ் (எஸ்திபிஎம்) தகுதியானவர்கள் உடனடியாக யுனிசெல் அடிப்படை கல்வி அல்லது மெட்ரிகுலேசனில் பதிந்துக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பு பிப்ரவரி 3 வரை நீடிக்கும். இது மட்டுமில்லாமல் டிப்ளோமா மற்றும் இளங்கலை கல்விக்கு உபகாரச் சம்பளம் அல்லது உதவி நிதிகளை வழங்க உள்ளது," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.









