NATIONAL

துன் மகாதீர்: பேங்க் நெகாராவிற்கு நிலம் வேண்டுமென்றால், இலவசமாக கொடுக்கலாம்!!!

7 ஜனவரி 2018, 10:20 AM
துன் மகாதீர்: பேங்க் நெகாராவிற்கு நிலம் வேண்டுமென்றால், இலவசமாக கொடுக்கலாம்!!!

ஷா ஆலம், ஜனவரி 7:

பேங்க் நெகாரா மத்திய அரசாங்கத்திடம் இருந்து நிலத்தை பெற ரிம 2 பில்லியனை கொடுத்ததாக பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி ஆலோசகர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மாநாட்டில் தலைமை உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய அரசாங்கம் இந்த நிலத்தை இலவசமாக வழங்கி இருக்கலாம் என்றார்.

"  பேங்க் நெகாரா கோரிக்கை விடுத்தால், இலவசமாக வழங்கலாமே. பேங்க் நெகாரா ரிம 2 பில்லியனை கொடுத்து வாங்கியது. இந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்," என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், நம் நாடு உலக அளவில் லஞ்ச ஊழலில் உயர்ந்த நிலையில் இருக்கிறது என்றார். பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்ந்து வெற்றி பெற்றால் ஒழிய சிறைக்கு செல்வதில் இருந்து தப்பிக்க முடியும் என்று முடிவு செய்துள்ளார் என்றார். ஆனாலும், அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் தைரியமாக பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#தமிழ் பிரியன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.