NATIONAL

சிலாங்கூர் மாநிலத்தை சிறப்பாக வழிநடத்தும் அஸ்மின் அலியே பிரதமர் பதவிக்கு தகுதியானவர்!!!

6 ஜனவரி 2018, 1:52 AM
சிலாங்கூர் மாநிலத்தை சிறப்பாக வழிநடத்தும் அஸ்மின் அலியே பிரதமர் பதவிக்கு தகுதியானவர்!!!

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 6:

அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயா தலைமைத்துவத்தை கையில் எடுக்கும் போது சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பிரதமர் பதவியில் அமர தகுதியானவர்களில் ஒருவர் ஆவர் என்று வழக்கறிஞர் ஹாரீஸ் ஹிடாஹாம் கூறினார். இளையோர் கருத்தரங்கான "புதிய நூற்றாண்டின் பிரதமர் யார்?" என்ற தலைப்பில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தை திறன்மிக்க நிர்வாகத்தினால் தலைசிறந்த மாநிலமாக தற்போது திகழ்கிறது என்றார்.

அஸ்மின் அலி தனது தலைமைத்துவத்தில் மக்களின் சமூக நலத்தின் மீது அக்கறை செலுத்தி வருகிறார், குறிப்பாக இளையோரை புறக்கணிக்கவில்லை என்று விவரித்தார்.

"  அஸ்மின் அலியை பொருத்த வரையில், ஒரு பிரதமர் ஆவதற்கு முன்பு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை ஒத்திகையாகவே நான் பார்க்கிறேன். மற்ற மாநிலங்களை காட்டிலும் சிலாங்கூர் வளமான மாநிலம். டாரூல் எசான் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூட அஸ்மின் அலிக்கு 60% மேல் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது," என்று தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து பரிவு மிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) செயல்படுத்தி வரும் வேளையில், இளைய தலைமுறையினருக்கு பெடுலி சிஸ்வா மற்றும் இக்திஸாஸ் தொழில் திறன் பயிற்சி போன்ற திட்டங்களையும் இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் பிரியன்

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.