NATIONAL

கெடா மாநில மக்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என்று அஸ்மின் நம்பிக்கை!!!

5 ஜனவரி 2018, 7:41 AM
கெடா மாநில மக்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என்று அஸ்மின் நம்பிக்கை!!!
கெடா மாநில மக்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என்று அஸ்மின் நம்பிக்கை!!!
கெடா மாநில மக்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என்று அஸ்மின் நம்பிக்கை!!!

கூருன், ஜனவரி 5:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தை கைப்பற்றினால் சிலாங்கூர் மாநிலத்தில் அமல்படுத்திய பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) நாட்டின் நெற்களஞ்சிய மாநிலமான கெடாவிலும் பின்பற்றப்படும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.  இதன் வழி கெடா மாநில மக்கள், சிலாங்கூர் மாநில மக்கள் பெறும் பயன்களை பெற முடியும் என்றார்.

"   கெடா மாநில மக்கள் தங்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதில் முதிர்ச்சி பெற்றவர்கள். ஆகவே, இன்று சிலாங்கூரில் நடக்கும் மக்கள் நலத்திட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலாங்கூர் மாநில அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கி உள்ளது. கெடா மாநில மக்களும் சிலாங்கூர் போன்று பயனடைய வேண்டும். இதனால், வரும் 14-வது பொதுத்  தேர்தலில் கெடா மாநில மக்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுத்தால் அது சாத்தியம் ஆகும்," என்று 'மக்களின் மீது அக்கறை' சூறாவளி பயண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.