SELANGOR

அம்பார் தெனாங் கிராமத்தின் தீபாவளி மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு

20 நவம்பர் 2017, 5:30 AM
அம்பார் தெனாங் கிராமத்தின் தீபாவளி மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு

 

டெங்கில், நவம்பர் 19:

அம்பார் தெனாங் கிராமத்தின் தீபாவளி மற்றும் மக்களுடனான களந்துரையாடல் நிகழ்வு மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை டிங்கில் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹாஜி போர்ஹான் அவர்கள் களந்து கொண்டு அதிகாரபூர்வமாக துவக்கி வைத்தார். இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த டிங்கில் இந்திய சமூக தலைவர் திரு ஷன்முகம், சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், பிபிஎஸ்தி வட்டார இந்திய சமூக தலைவர் டத்தோ சிவக்குமார் மற்றும் ஏற்பாட்டு குழுவினருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

 

இது மட்டுமின்றி கூடிய விரைவில் சிலாங்கூர் மாநில அரசின் திட்டங்களில் இந்திய சமூகத்தினரின் பங்கேற்பினை அதிகரிக்கும் வண்ணம் கார்த்திகை தீப விழா, பொங்கல் விழா மற்றும் சில திட்டங்களை வகுத்திருப்பதாகவும் திரு ஹாஜி போர்ஹான் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்திய சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு தீபன் சுப்ரமணியம், சிலாங்கூர் மாநில அரசின் திட்டங்கள் மற்றும் அதனை பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் தொட்டு விளக்கமளித்தார். குறிப்பாக, சிலாங்கூர் மாநில அரசு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள “கிஸ்” அட்டை அதாவது மாதம் 2000 ரிங்கிட்ர்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சார்ந்த தாய்மார்களுக்கு மாதம் 200 விகிதம் உணவு பொருட்கள் வாங்குவதற்கான அட்டை ஜனவரி 2018 துவங்கி பயண்பாட்டிற்கு வரவிருப்பதாகவும் இதன் பதிவு பாரங்கள் வந்தவுடன் குறைந்த வருமானம் ஈட்டும் இந்திய குடும்பங்களை பதிவதிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த திட்டம் சிலாங்கூர் முழுவதும் சுமார் 30,000 பேருக்கு சென்று சேரும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆகவே தகுதி பெறும் இந்திய தாய்மார்கள் முன்வந்து பதிவு செய்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

செய்தி தொகுப்பு :

தீபன் சுப்ரமணியம்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.