NATIONAL

ஜோகூர் மாநிலம் பாக்காத்தான் வசம் ஆகுமா?

30 செப்டெம்பர் 2017, 2:20 PM
ஜோகூர் மாநிலம் பாக்காத்தான் வசம் ஆகுமா?

ஜோகூர் பாரூ, செப்டம்பர் 30:

ஜொகூர் மாநிலத்தின் பக்காத்தான் ஹரப்பான் தலைவராகப் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவரான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அம்னோ கட்சி ஜொகூர் மாநிலத்தில் தான் முதன்முதலில் தோற்றுவிக்கப் பட்டது.

அடுத்து வரும் 14-வது பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தைத் தனது முன்னணி மாநிலமாக முன்னிறுத்தி பக்காத்தான் ஹரப்பான் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

மொகிதின் யாசின் அம்னோவில் இருந்து விலக்கப் பட்டதால் ஜொகூர் மாநிலத்தில் அதிருப்தி நிலவுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் கடுமையான போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜொகூரின் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 15 தொகுதிகளில் வெற்றி காண எதிர்க் கட்சிகள் திட்டம் கொண்டுள்ளன.

ஜொகூரில் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகள். அவற்றில் தற்போது 19 சட்டமன்றத் தொகுதிகளை எதிர்க் கட்சிகள் தங்கள் வசம் கொண்டுள்ளன. மாநில ஆட்சி அமைக்க 28 சட்டமன்றத் தொகுதிகள் தேவை.

#தமிழ் முத்துக்கள்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.