SELANGOR

வெள்ளத்தை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்

19 செப்டெம்பர் 2017, 5:08 AM

கோலா சிலாங்கூர், செப்டம்பர் 19:

கோலா சிலாங்கூர் நிவாரண நிர்வாக நடவடிக்கை குழு எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலையை எதிர் கொள்ள தயாராக இருக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து வருவதால் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலையில் நடவடிக்கை குழு கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் இடங்களில் ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வருகிறது.

"  வெள்ளம் ஏற்படும் இடங்களான தஞ்சோங் காராங், கம்போங் குவாந்தான், பந்தாய் ரெமீஸ்  மற்றும் சுங்கை பூலோ நகரம் கட்டம் கட்டமாக கண்காணித்து வருவோம். அரசாங்க இலாகாகளான காவல்துறை, தீயணைப்பு படையினர் மற்றும் மலேசியா ஆயுதப்படை ஆகியவற்றிற்கு கட்டளை இடப்பட்டுள்ளது," என்று நடவடிக்கை குழுவின்  தலைவர் சம்சூல் ஷாரில் கூறினார்.

சிலாங்கூர் மாநில நீர்ப்பாசன மற்றும் வடிகால் இலாகாவும் கடலோரப் பகுதிகளில் உடைகள் மற்றும் தடுப்புகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.