NATIONAL

அஸ்மின்: நஜிப் மக்களை அச்சுறுத்தும் அரசியல் நடத்துகிறார்

12 ஆகஸ்ட் 2017, 8:25 AM
அஸ்மின்: நஜிப் மக்களை அச்சுறுத்தும் அரசியல் நடத்துகிறார்
அஸ்மின்: நஜிப் மக்களை அச்சுறுத்தும் அரசியல் நடத்துகிறார்

பத்து கேவ்ஸ், ஆகஸ்ட் 12:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், குறுகிய சிந்தனை கொண்ட அரசியல் செயல்பாடுகள் மூலம் பல்வேறு பயமுறுத்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர்டடத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

நஜிப் ரசாக், மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மாற்றம் செய்தாலும் தற்போதைய நாட்டின் நெருக்கடிகளை தீர்க்க இயலாது என்ற வாதத்தை உண்மையில்லை என்று அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நிர்வாகம் செய்யும் நடைமுறை எல்லா மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரி என்றும் பாக்காத்தான் நாட்டிற்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறினார்.

AZMIN ALI (1)

 

 

 

 

 

 

 

 

 

"   சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்கள், ஆட்சி மாற்றத்தின் வழி சிறந்த ஒரு அரசாங்கம் அமைக்க முடியும் என்று நிரூபித்து உள்ளது. மக்கள் நேர்மையான தலைவர்களை எதிர்ப்பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்கள் தான் ஊழலையும் மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தை நிர்வகிக்க முடியும். நாங்கள் சிலாங்கூரில் நிருபிக்கப்பட்டு விட்டது. அப்படி சிலாங்கூரை திறன் மிக்க முறையில் நிர்வாகம் செய்ய முடிந்தால், கண்டிப்பாக புத்ரா ஜெயாவையும் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யலாம்," என்று கோம்பாக், கம்போங் பாரூ பத்து கேவ்ஸ் பொதுத் திடலில் நடைபெற்ற பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களின் பெருவிழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.