NATIONAL

நஜிப்புக்கு மக்களிடையே இருக்கும் மதிப்பு தெரியவில்லை!!!

8 ஆகஸ்ட் 2017, 8:07 AM
நஜிப்புக்கு மக்களிடையே இருக்கும் மதிப்பு தெரியவில்லை!!!

சபாக் பெர்னாம், ஆகஸ்ட் 8:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், மக்களிடையே தனது மற்றும் அம்னோ தேசிய முன்னணியின் மீதும் உள்ள 'நன்மதிப்பு' தெரியாமல் இருக்கிறார். அண்மையில் நடத்திய ஆய்வில் நஜிப்பின் கட்சியின் நிலை மிக மோசமாக உள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். மக்கள், அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றும் இது சரித்திரத்தில் மிக மோசமான நிலையில் இருப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது என்று தெரிவித்தார்.

"   ஆக, சிலாங்கூரை கைப்பற்றும் முயற்சி மட்டுமல்ல, புத்ரா ஜெயாவை கூட நஜிப் இழக்கும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது என்று தாம் நம்புகிறேன்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார். தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவரான நஜிப் ஷா ஆலமை வென்று அம்னோ தேசிய முன்னணி சிலாங்கூரை 14-வது பொதுத் தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என்று அறிவித்ததை மேற்கோள்காட்டி இப்படி கூறினார்.

நஜிப் ரசாக், தைரியத்துடன் ஷா ஆலமின் வெற்றி, சிலாங்கூரின் 22 நாடாளுமன்றத்திலும் பரவி அம்னோ தேசிய முன்னணி கைப்பற்றும் முயற்சிக்கு வித்திடும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.