NATIONAL

எப்ஃஐசி வழக்கு: 2 மூத்த நிர்வாகிகள் 6 நாட்களுக்கு தடுப்புக்காவல்

22 ஜூலை 2017, 6:02 AM
எப்ஃஐசி வழக்கு: 2 மூத்த நிர்வாகிகள் 6 நாட்களுக்கு தடுப்புக்காவல்

புத்ராஜெயா, ஜூலை 22:

இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். கிங்ஸ்தன், லண்டனில் உள்ள நான்கு நட்சத்திர தங்கும் விடுதிவை பெல்டா முதலீட்டு நிறுவனம்  (எப்ஃஐசி) வாங்கிய பங்கு வர்த்தணை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஜிஸ்திரேட் நிக் இஸ்பாஃனீ தஸ்னீம் வான் அப்துல் ரஹ்மான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட அனுமதி வழங்கினார். மேற்கண்ட இரண்டு நபர்களும் 36 இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதில் ஒருவர் அஞ்சல் சேவை நிறுவனத்தின் சொத்துடமை பிரிவின் தலைவர் என்றும் மற்றொருவர் சொத்துடமை ஆலோசக நிறுவனத்தின் இயக்குனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.