NATIONAL

லெங்கெங் சட்ட மன்ற உறுப்பினர் மரணமடைந்தார்

19 ஜூலை 2017, 1:06 AM
லெங்கெங் சட்ட மன்ற உறுப்பினர் மரணமடைந்தார்

கோலா பீலா, ஜூலை 19:

லெங்கெங் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ ஈசாக் இஸ்மாயில் மாரடைப்பால் துவங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் காலமானார். 66 வயதுடைய ஈசாக் நேற்று இரவு 11.25 மணிக்கு இறந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்ததாக பிஎச் ஓன்லைனில் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் செயலாளர், டத்தோ ஸ்ரீ மாட் அலி ஹாசான் மருத்துவமனையில் சம்பவத்தை உறுதிப் படுத்தினார். கோலா பீலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஹாசன் மாலிக் கூறுகையில், ஈசாக் தஞ்சோங் ஈப்போவில் நடந்த ஸ்ரீ மெனாந்தி சட்ட மன்ற உறுப்பினரின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொண்ட சமயத்தில் மயங்கி விழுந்தார் என்று பிஎச் ஓன்லைனில் தெரிவித்தார். உடனடியாக அவரை துவங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சேர்ந்ததாகவும், இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக ஹாசன் மாலிக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.