NATIONAL

ஓப்ஸ் செலாமாட்: 11 நாட்களில் 17,147 விபத்துகள்

29 ஜூன் 2017, 2:01 PM
ஓப்ஸ் செலாமாட்: 11 நாட்களில் 17,147 விபத்துகள்

சுங்கைப்பட்டாணி, ஜூன் 29:

ஓப்ஸ் செலாமாட் 11/2017 தொடங்கிய 11 நாட்களில் 17,147 விபத்துகள் நடந்துள்ளன என்றும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 1,620 சம்பவங்கள் அல்லது 10% உயரந்து காணப்படுகிறது. கடந்த ஜூன் 18-இல் ஆரம்பிக்கப்பட்ட ஓப்ஸ் செலாமாட் நடவடிக்கையை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 2016-இல் 15,527 விபத்துகள் நடந்துள்ளன என்று புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணை பிரிவின் இயக்குனர் எஸ்ஏசி ஷாருல் ஓத்மான் மன்சூர் கூறினார்.

ஆனாலும் மரணச் சம்பந்தப்பட்ட விபத்துகள் 36 குறைந்து 172 ஆக பதிவு செய்து உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் கூறுகையில், ஷாருல் ஓத்மான் அதிகமான வாகனங்கள் விபத்துகள் அதிகரிக்க காரணம் என்றும் தற்போது 27 மில்லியன் பதிவு செய்யப் பட்ட வாகனங்கள் மலேசியாவில் இருப்பதாக தெரிவித்தார். நோன்பு பெருநாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன என்று கூறினார்.

இதனிடையே மோட்டார் ஓட்டிகளே அதிகமாக மரணம் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி கொண்டதாக உள்ளது. இதில் 122 மரணச் சம்பவங்கள் மோட்டார் சம்பந்தப்பட்டதாக பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

SUMBER: BERNAMA

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.