NATIONAL

பெண்ணைக் கற்பழித்த சந்தேகத்தின் பேரில் 'கிரேப்கார்' ஓட்டுனர் கைது

12 ஜூன் 2017, 4:41 AM
பெண்ணைக் கற்பழித்த சந்தேகத்தின் பேரில் 'கிரேப்கார்' ஓட்டுனர் கைது

கோலா லம்பூர், ஜூன் 12:

பண்டார் புத்ரா பெர்மாய், ஸ்ரீ கெம்பாங்கானில் மைவி காரில் ஒரு பெண்ணை கற்பழித்த சந்தேகத்தின் பேரில் 'கிரேப்கார்' கட்டுரை காவல்துறை கைது செய்ததாக கூறுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் நடந்த அதிரடி நடவடிக்கையில் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் சுங்கை பூலோவில், செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் சிறப்பு குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

செர்டாங் மாவட்ட காவல்துறை ஆணையர், மெகாட் முகமட் அமினுடின் மெகாட் அலியாஸ் கூறுகையில், அந்த ஆடவர் விடிகாலை மணி 4 அளவில் , 29 வயது மதிக்கத்தக்க பெண்ணை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார் என்று கூறினார். சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பெண் குடி போதையில் இருந்ததாகவும் எதிர்த்து போராடும் சூூழ்நிலையில் இல்லை என்று கூறினார்.

 

 

 

 

 

கற்பழித்த பின் அந்த ஆடவர் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டுக்கு அனுப்பியதாகவும் காவல்துறை ஆடவரிடம் துணிமணிகள் மற்றும் மைவி காரையும் பறிமுதல் செய்தனர் என்று பெர்னாமாவிடம் கூறினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.