NATIONAL

1எம்டிபி பெரும் புள்ளியை தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட விடாதீர்கள்

11 மே 2017, 4:29 AM
1எம்டிபி பெரும் புள்ளியை தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட விடாதீர்கள்
1எம்டிபி பெரும் புள்ளியை தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட விடாதீர்கள்

ஷா ஆலம், மே 11:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  (எஸ்பிஆர்எம்) விசாரணைகளை மற்றும் வழக்கு பதிவு செய்து வரும் முயற்சிகள் நாட்டின் இலஞ்ச ஊழலை குறைக்கும் என்றும்  இது தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ கூறினார். பாக்காத்தான் கூட்டணி சின்ன மீன்களை மட்டும் பிடிக்காமல் பெரிய மீன்களையும் சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

"   ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு நாம் அனைவரும் வரவேற்று ஆதரிக்கும் வேளையில் 1எம்டிபி பெரும் புள்ளியை மட்டும் சுதந்திரமாக வெளியில் சுற்றிக் கொண்டு இருப்பது மட்டுமில்லாமல் விசாரணையையும் நீக்கப்பட்டது கவலை அளிக்கிறது. நாட்டின்  உயரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கீழ் நிலையில் உள்ள அரசு ஊழியர்களும் இதே தவறை செய்யும் போது ஆச்சரியம் இல்லை," என்று கூறினார்.

Charles-Santiago-L

 

 

 

 

இதனிடையே, சார்லஸ் மேலும் கூறுகையில், ஊழல் புரியும் நபர்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்வதாகவும் அது அவர்களின் வருமானத்தை விட பல மடங்கு  அதிகம் என்றும் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.