புத்ராஜெயா, ஆகஸ்ட் 18 - 2026-ஆம் ஆண்டிற்கான SPM - எஸ்.பி.எம் எழுத்துப்பூர்வ தேர்வுகள் வரும் நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மலாய் மொழி வாய்மொழித் தேர்வு அக்டோபர் 26 முதல் 29 வரையிலும்,
அதனைத் தொடர்ந்து ஆங்கில மொழி வாய்மொழித் தேர்வு நவம்பர் 2 முதல் 5 வரையிலும் நடத்தப்படும்.
மேலும், அறிவியல் செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 16 முதல் 18 வரை நடைபெறும் வேளையில், மலாய் மொழி கேட்டல் தேர்வு நவம்பர் 30-ஆம் தேதியும்,
ஆங்கில மொழி கேட்டல் தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதியும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் உள்ள 3,334 தேர்வு மையங்களில் மொத்தம் 420,879 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதற்கான முழுமையான தேர்வு கால அட்டவணையைத் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.





