காஜாங், ஆகஸ்ட் 10 - பழுதுபார்ப்பு பணிகளுக்காக இன்று தொடங்கி ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை காஜாங் அரங்க சதுக்கம் தற்காலிகமாக மூடப்படும்.
அந்த சதுக்கத்தில் , பழுதுபார்ப்பு பணிகளுடன், சிலாங்கூர் மாநில மெர்டேக்கா தினத்துக்கு முந்திய கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
அதையடுத்து , இந்த தற்காலிக மூடல் குறித்து பொது மக்கள் அறிந்துக் கொள்ளும்படியும் , அக்கால கட்டத்தில் அப்பகுதியில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமது ஃபேஸ்புக் பதிவின் மூலம், இந்த இடையூறுக்காக வருத்தம் தெரிவித்த காஜாங் நகராண்மைக் கழகம் , இவ்விவகாரத்தில் பொது மக்களின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாகக் குறிப்பிட்டது.



