கடல் நீர் ; சிலாங்கூரின் எதிர்கால நீர் ஆதாரம் !

25 ஜூலை 2026, 7:18 AM
கடல் நீர் ; சிலாங்கூரின் எதிர்கால நீர் ஆதாரம் !
கடல் நீர் ; சிலாங்கூரின் எதிர்கால நீர் ஆதாரம் !

ஷா ஆலம், ஜூலை 25: எதிர்காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சினையை எதிர்கொள்வதவற்கான ஒரு நீண்டகால மாற்று ஏற்பாடாக, கடல் நீரைப் பயன்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யவும், தடையற்ற தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்கட்டமைப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இர். இஜாம் ஹாஷிம் தெரிவித்தார்.

"ஒரு புதிய நீர் ஆதாரத்தைப் பயன்படுத்துவதற்காக, கடல் நீரை உப்புநீக்கம் (Desalination) செய்யும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது இன்னும் திட்டமிடல் நிலையில்தான் உள்ளது.

தற்போது இத்தொழில்நுட்பத்திற்கான செலவு மிகவும் குறைவு என்பதோடு, அதிக பொருளாதாரச் சிக்கனமும் வாய்ந்தது. இதனை வணிகரீதியான செலவினக் கோணத்தில் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

நாம் மழைநீரை மட்டுமே நம்பியிருக்காமல், நமது நீர் ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டும்," என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய இஜாம், தூய்மையான நீர் ஆதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, கடல் நீரை உப்புநீக்கும் ஆலையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த வசதி ஏற்படுத்தப்பட்டால், நாளொன்றுக்கு சுமார் 300 மில்லியன் லிட்டர் கூடுதல் தூய்மையான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.