வீட்டை விட காருக்கும் கேஜெட்டுகளுக்குமே முன்னுரிமை ; கல்வியாளர்

22 ஜூலை 2026, 3:25 AM
வீட்டை விட காருக்கும் கேஜெட்டுகளுக்குமே  முன்னுரிமை ; கல்வியாளர்
வீட்டை விட காருக்கும் கேஜெட்டுகளுக்குமே  முன்னுரிமை ; கல்வியாளர்
வீட்டை விட காருக்கும் கேஜெட்டுகளுக்குமே  முன்னுரிமை ; கல்வியாளர்

ஷா ஆலாம், ஜூலை 22 – இளைஞர்களால் சொந்தமாக வீடு வாங்க முடியாமல் போவதற்கு குறைந்த வருமானம் மட்டுமே காரணம் அல்ல.

இளைஞர்களின் செலவு செய்யும் முறையும் அதற்கு காரணம்.

குறிப்பாக தற்போது இளைஞர்கள் பலர் சொந்த வீடு வாங்குவதற்கான சேமிப்பை உருவாக்குவதை விட, வாகனங்கள், மின்னணு சாதனங்கள் (Gadgets) மற்றும் பொழுதுபோக்கிற்காக செலவிடுவதற்கே இன்னும் முன்னுரிமை அளிக்கிறார்கள் எனக் கூறுகிறார் மாரா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் (UiTM) கட்டிடக் கலைப் புலத்தின் மூத்த விரிவுரையாளரான டாக்டர் ரோஹாயு மஜித்.

UiTM Dr Rohayu Majid - Picture via FAKULTI ALAM BINA UiTM

நடுத்தர வருமானம் கொண்ட சில நபர்கள் நிலையான மற்றும் ஒழுக்கமான சேமிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் காரணமாக அவர்களால் வீடுகளை வாங்க முடிகிறது.

மறுபுறம், மாதத்திற்கு RM7,000 முதல் RM8,000 வரை சம்பாதிப்பவர்கள் கூட இன்னும் சொந்தமாக வீடு இல்லாமல் இருக்கிறார்கள்.

ஏனெனில் அவர்கள், வாழ்க்கை முறை (Lifestyle) மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவே அதிகம் செலவு செய்கின்றனர்.

வீடு என்பது காலப்போக்கில் அதன் மதிப்பு அதிகரிக்கும் சாத்தியம் கொண்ட ஒரு சொத்து என்பதை சிலர் புரிந்து வைத்துள்ளனர். இருப்பினும், சில இளைஞர்கள் மற்ற விஷயங்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கத் தேர்வு செய்கிறார்கள்," என்று டாக்டர் ரோஹாயு மஜித் மீடியா சிலாங்கூரிடம் (Media Selangor) தெரிவித்தார்.

வீடு வாங்க திட்டமிடுவதற்கு 25 முதல் 35 வயது வரையிலான காலகட்டமே மிகச் சிறந்த பருவமாகும் என்று அவர் கூறினார்.

ஏனெனில் இந்த வயதில் பெரும்பாலான நபர்கள் மிகவும் நிலையான தொழில் வாழ்க்கையையும், சேமிப்பைச் சேகரிப்பதற்கான அதிக வாய்ப்புகளையும் கொண்டுள்ளனர்.

இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான இடம் மற்றும் சொத்து வகையை முன்கூட்டியே கண்டறிந்து, ஒழுக்கமான முறையில் தங்களின் நிதியைத் திட்டமிட்டு, சொந்த வீடு வாங்குவதற்கான இலக்குகளை ஆரம்பத்திலேயே நிர்ணயிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே, முறையற்ற அல்லது நிலையற்ற வருமானம் கொண்டவர்கள் 100 சதவீதம் வரை நிதியுதவி பெற உதவும் வீட்டு உபயோகக் கடன் உத்தரவாதத் திட்டம் (SJKP) உள்ளிட்ட பல்வேறு வீட்டு உரிமை முயற்சிகள் (Home ownership initiatives) குறித்து இன்னும் பலருக்கு விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

SJKP

"பல இளைஞர்களுக்கு உண்மையில் 35 வயதிற்கு முன்பே ஒரு சொந்த வீட்டை வாங்குவதற்கான திறன் உள்ளது. முக்கியமானது என்னவென்றால், முறையான திட்டமிடல், சேமிப்பு ஒழுக்கம் மற்றும் செலவுப் பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்வதாகும்.”

முதல் வீட்டைச் சொந்தமாக்குவது என்பது இளைஞர்களுக்கு ஒரு யதார்த்தமான கனவு. அதற்கான வாய்ப்பு அங்கு உள்ளது, ஆனால் அவர்கள் தங்களின் நிதியை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு, கிடைக்கக்கூடிய வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.