2.8 மில்லியன் ஊழல் வழக்கு; உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து சீஸி இஸெட் விடுதலை

20 ஜூலை 2026, 5:26 AM
2.8 மில்லியன் ஊழல் வழக்கு; உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து சீஸி இஸெட்  விடுதலை

கோலாலம்பூர், ஜூலை 20 : பப்ளிக் மியூச்சுவல் பெர்ஹாட் (Public Mutual Berhad) யூனிட் டிரஸ்ட்டின் 150 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய முதலீட்டில், 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் செய்தது தொடர்பான வழக்கில் இருந்து சீஸி இஸெட் (Zizie Izette) விடுவிக்கப்பட்டார்.

அந்த ஊழலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து 3 குற்றச்சாட்டுகளில் இருந்தும், கோலாலம்பூர் செஷன் நீதிமன்றம் அவரை விடுவித்து விடுதலை செய்தது.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கின் இறுதியில் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபித்ததை அடுத்து, நீதிபதி ரோஸ்லி அகமட் இந்த தீர்ப்பை வழங்கினார்.

அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்," என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மறைந்த முன்னாள் கினாபாடங்கான் (Kinabatangan) நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடினின் மனைவியான 47 வயது ஜிஸி இஸெட், தீர்ப்பைக் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டார்.

நீதிபதி ரோஸ்லி தனது தீர்ப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமான முதல் குற்றவாளியான புங் மொக்தாருக்கு எதிரான முக்கிய குற்றத்தின் அனைத்து அத்தியாவசிய கூறுகளையும் அரசுத்தரப்பு நிரூபிக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டார்.

"இந்த வழக்கில், முதல் குற்றவாளி இறந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், உடந்தையாக செயல்பட்டதற்கான கூறுகளை அரசுத்தரப்பால் நிரூபிக்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.

எதிர்த்தரப்பு மற்றும் அரசுத்தரப்பு சமர்ப்பித்த சாட்சியங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் (ஜிஸி இஸெட்) இந்த முதலீடு குறித்து அறிந்திருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, ஊழல் என்று கூறப்பட்ட 2.8 மில்லியன் ரிங்கிட் பணம், உண்மையில் அறிமுகக் கட்டணம் மட்டுமே ஆகும்.

அந்த அறிமுகப் பணம் ஊழல் அல்ல," என்று ரோஸ்லி கூறினார். - பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.