கோலாலம்பூர், ஜூலை 16 - தொற்றா நோய்களின் பாதிப்பு, குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயின் (Type 2 Diabetes) பாதிப்பு தற்போது 14 வயதினர் மத்தியில் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது நாட்டின் இளைஞர்களின் ஆரோக்கிய நிலை குறித்த ஆரம்பகால எச்சரிக்கை என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மட் தெரிவித்தார்.
தேசிய நீரிழிவு பதிவேட்டின் (NDR) தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் 1,926 புதிய நீரிழிவு பாதிப்புகள் பதிவாகின.
2025-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1,932-ஆக உயர்ந்துள்ளது மிகவும் கவலையளிக்கும் போக்கைக் காட்டுவதாக அமைச்சர் கூறினார்.
இதனிடையே, இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜூன் 2026 வரை) 660 புதிய சம்பவங்கள் பதிவாகின.
இந்த எண்ணிக்கை, வகை 2 நீரிழிவு நோய் இனி பெரியவர்களை மட்டுமே பாதிக்கும் நோய் அல்ல, மாறாக 30 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று அமைச்சர் மக்களவையில் குறிப்பிட்டார்.



