கோலாலம்பூர், ஜூன் 27- சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கம் சட்டவிரோதமாக ஊடுருவப்பட்டது.
அதையடுத்து அந்த அகப்பக்கம் முடங்கியிருப்பதோடு, விரைந்து சட்டவிரோத ஊடுருவலுக்கான காரணத்தை கண்டறிந்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
தற்போதைக்கு பொது மக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு சுகாதார அமைச்சின் சமூக அகப்பக்கங்களையும் இதர அதிகாரப்பூர்வ தொடர்பு தளங்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



