இந்தோனேசியா ஓபன்: இரண்டாவது சுற்றில் ஆரோன்-வூய் யிக் தோல்வி

5 ஜூன் 2026, 7:19 AM
இந்தோனேசியா ஓபன்: இரண்டாவது சுற்றில் ஆரோன்-வூய் யிக் தோல்வி

கோலாலம்பூர், ஜூன் 5: இன்று இஸ்டோரா செனாயனில் நடைபெற்ற 2026 இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில், உள்ளூர் இணையிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மலேசியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் ஜோடியான ஆரோன் சியா - சோ வூய் யிக் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

போட்டியின் இரண்டாம் நிலைத் தரவரிசையில் உள்ள இந்த மலேசிய ஜோடி, தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாகப் போராடிய போதிலும், ரேமண்ட் இந்த்ரா - நிக்கோலஸ் ஜோக்வின் இணையிடம் 33 நிமிடங்களில் 14-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தது.

எவ்வாறாயினும், ஆடவர் இரட்டையர் பிரிவில் கோ செ ஃபீ - நூர் இசுடின் முஹமட் ரும்சானி ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் மலேசியாவிற்கான நம்பிக்கை இன்னும் நீடிக்கிறது. இவர்கள் இங்கிலாந்து ஜோடியான பென் லேன் - சீன் வெண்டியை 21-11, 21-13 என்ற கணக்கில் தோற் கடித்தனர்.

இந்த இங்கிலாந்து ஜோடிக்கு எதிராக முந்தைய மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு, செ ஃபீ - இசுடின் ஜோடி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

காலிறுதியில் மலேசிய ஜோடி, இந்திய இணையான ஹரிஹரன் அம்ஸாகருணன் - எம்.ஆர். அர்ஜுனை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இந்திய ஜோடி, முன்னதாக மற்றொரு மலேசிய ஜோடியான காங் காய் சிங் - ஆரோன் டாயை 16-21, 21-15, 21-19 என்ற கணக்கில் வீழ்த்தி வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவில், மலேசியாவின் முதல் நிலை வீராங்கனையான கே. லெட்சனா இரண்டாவது சுற்றில் ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 15-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் மலேசிய வீரர் லியோங் ஜுன் ஹாவோவும் இதே நிலையைச் சந்தித்தார். அவர் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லானியரிடம் 16-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசிய ஜோடியான ஹூ பாங் ரோன் - லாய் பெய்  ஜிங், தாய்லாந்து ஜோடியான டெச்சபோல் புவரனுக்ரோ - சுபிஸ்ஸரா பேவ்சம்ப்ரானிடம் 14-21, 22-24 என்ற கணக்கில் வீழ்ந்து தங்களது பயணத்தை முடித்துக் கொண்டனர்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.