ஷா ஆலம், ஏப்ரல் 23: சிலாங்கூர் தீவிர வறுமையை ஒழிப்பதில் வெற்றி கண்டுள்ளது., RS-2 வழி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும் வழிவகைகள் . இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் வழி (RS-2) முன்னெடுக்கும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வறுமைப் பிரச்சனையை முழுமையாக கையாள கடும் முயற்சிகளை சிலாங்கூர் அரசாங்கம் தொடர்ந்து வருகிறது.
2024-ஆம் ஆண்டில் மாநிலத்தில் தீவிர வறுமையை வெற்றிகரமாக ஒழித்துள்ளதாகவும், 2022-ஆம் ஆண்டில் 1.5 விழுக்காடாக இருந்த தீவிர வறுமை விகிதம் 0.9 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் டத்தோ மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"நாம் இன்னும் சார்புநிலை வறுமைப் பிரச்சினையை பிங்க்கிசான் அல்லது கூடுதல் பிங்காஸ் மற்றும் பல திட்டங்கள் மூலம் தீவிரமாகக் கவனிக்க வேண்டும்."
"உதாரணமாக, 2022-ஆம் ஆண்டில், சிலாங்கூரில் சார்புநிலை வறுமை 14.2 விழுக்காடாக இருந்தது, அது 2024-ஆம் ஆண்டில் 8.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது," என்று அவர் கூறினார்.
நேற்று இங்குள்ள சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் (DNS) முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) சாதனை கண்காட்சியைத் தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அதே வேளையில், 2025-ஆம் ஆண்டிற்கான முழுமையான வறுமை விகித இலக்கு 0.7 விழுக்காடு என்றும், ஆனால் மலேசிய புள்ளி விவரத் துறையிடமிருந்து (DOSM) அதிகாரப்பூர்வ தரவுகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் அமிருடின் தெரிவித்தார்.
அவரைப் பொறுத்தவரை, RS-2 வேலை வாய்ப்புக் கொள்கைகள், நலத்திட்ட உதவிகளின் செயல்திறனை மறுமதிப்பீடு செய்தல் மற்றும் செயல்திறன் மிக்க வெளியேறும் கொள்கையை (exit policy) செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
"எனவே, சேவை அமைப்பையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் தீவிர வறுமையை ஒழித்தது, RS-2 வழி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்
23 ஏப்ரல் 2026, 6:54 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான பதிவுகளைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டத்தோ மந்திரி புசார்
Shalini Rajamogun, Sofia Nasir
4 மே 2026

selangor
பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் மக்களின் மறுகுடியமர்வு பணிகள் நிறைவடைந்தன - மந்திரி புசார்
Pakiya
30 மே 2026

selangor
இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் கீழ் இரயில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் - மந்திரி புசார்
Shalini Rajamogun
27 மே 2026

selangor
மக்கள் நீதிக் கட்சியின் (கெ அடிலான்) இணைத் தேர்தல் இயக்குநராக நூருல் இஷாவிற்கு பதிலாக அமிருடின் நியமனம்; தேர்தல் வியூகங்கள் தீவிரம்
Pakiya
26 மே 2026

உங்கள் கருத்து என்ன?





