ஷா ஆலம், ஏப்ரல் 16 – சிலாங்கூரில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், மாநிலத்தில் பன்றி இறைச்சி விநியோகம் சீராகவும் போதுமானதாகவும் உள்ளது.
சிலாங்கூர் சுல்தானின் ஆணைக்கு இணங்க, தற்போதைய தேவைகள் வெளிநாட்டு இறக்குமதி மூலம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த இறைச்சி விநியோகத்தின் மூலம் குறித்த விரிவான தகவல்கள் மாநில அரசிடம் இல்லை என்றும், ஏனெனில் இது மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வருவதாகவும் அவர் விளக்கினார்.
"இந்த விவகாரம் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் (KPKM) கீழ் உள்ளது. எனக்கு கிடைத்த அறிக்கைகளின்படி, பன்றி இறைச்சி விநியோகம் போதுமானதாக உள்ளது," என்றார்.
"சிலாங்கூரில் இனி பன்றிப் பண்ணைகள் இருக்காது என்ற சிலாங்கூர் சுல்தானின் ஆணைக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்பது இறுதியானது," என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிலாங்கூரில் பன்றி இறைச்சி விநியோகத்தின் வளர்ச்சி குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த ஜனவரி மாதம், சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டார்.
விரும்பத்தகாத துர்நாற்றம் காரணமாக காற்று மாசுபாட்டையும், கழிவுகள் மற்றும் சாக்கடை வெளியேற்றத்தால் ஆற்றின் நீர் ஆதாரங்கள் மாசடைவதையும் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துவதாக சுல்தான் குறிப்பிட்டிருந்தார்.
சிலாங்கூரில் பன்றி இறைச்சி விநியோகம் சீராகவும் போதுமானதாகவும் உள்ளது
17 ஏப்ரல் 2026, 1:41 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
தஞ்சோங் சிப்பாட்டில் பன்றிப் பண்ணைகளை முழுமையாக மூட உத்தரவு – மாநில அரசு
Shalini Rajamogun
19 மே 2026

selangor
இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் கீழ் இரயில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் - மந்திரி புசார்
Shalini Rajamogun
27 மே 2026

selangor
‘சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்பு’ திட்டங்கள் ஜூன் முதல் அமல் - அமிருடின் ஷாரி
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
24 மே 2026

selangor
தஞ்சோங் சிப்பாட்டில் பன்றிப் பண்ணைகளை மூடும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன
Shalini Rajamogun
29 மே 2026

உங்கள் கருத்து என்ன?




