ஷா ஆலம், மே 31: எந்தவொரு அவசரச் சம்பவத்தையும் எதிர்கொள்ளும் ஆயத்த நிலையை மேம்படுத்தும் வகையில், கோல சிலாங்கூர் நகராட்சி மன்றத்தின் (MPKS) 50 படகோட்டிகள், சுற்றுலாப் பங்காளிகள் மற்றும் பந்தாஸ் (PANTAS) படையினர் கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி சரணாலயத்தில் நடைபெற்ற நீர் பாதுகாப்பு மற்றும் அவசரகாலப் பயிற்சியில் பங்கேற்றனர்.
நீர் சுற்றுலா பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவதோடு, நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) ஒவ்வொரு பணியாளரும் புரிந்துகொள்வதை உறுதிசெய்வதற்கான ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது என MPKS தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
"குறிப்பாக, படகு சேவை இயக்குநர்களுக்கு நீர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை தொடர்பான புரிதலையும் அடிப்படைப் பயிற்சியையும் வழங்குவதற்காகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது," என MPKS தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி சரணாலயமும் ஒன்றாகும்.
ஆகவே, பார்வையாளர்களின் அனுபவத்தைச் சிறப்பான முறையில் உறுதிசெய்ய, பாதுகாப்பு அம்சங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அது குறிப்பிட்டது.
இந்தப் பயிற்சியின் போது, எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கையாக, நீர் மீட்பு உத்திகள் மற்றும் உயிர்காக்கும் ஆடைகள் (safety jackets) போன்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் வந்து சேரும் வரை, உடனடியாகச் செய்யக்கூடிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.
பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்துவும் அதோடு மட்டுமல்லாமல், அவசரநிலையின் போது நீர் சுற்றுலாவுக்கான SOP-ஐ ஒவ்வொரு பணியாளரும் புரிந்துகொண்டு பின்பற்றுவதை உறுதிசெய்வதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
அனைத்து தரப்பினரின் பாதுகாப்பிற்காக, அவசரகால சூழ்நிலைகளை விரைவாகவும், திறமையாகவும், நேர்த்தியாகவும் கையாளும் பணியாளர்களின் திறனையும் செயல் திறனையும் அதிகரிக்கவும் இந்த நிகழ்ச்சி உதவுகிறது.
"கோல சிலாங்கூரில் சுற்றுலாத்துறை தொடர்ந்து நேர்மறையான முறையில் வளர்ச்சியடைவதை உறுதி செய்வதில் MPKS-இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்நிகழ்ச்சி நிரூபிக்கிறது," என்றும் MPKS மேலும் கூறியது.
இந்த முயற்சியானது, பாதுகாப்பான மற்றும் தரமான சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி சரணாலயத்தின் நற்பெயரை மேலும் வலுப்படுத்தும் என்றும் அது சுட்டிக்காட்டியது.
நீர் அவசரநிலைகளைக் கையாள 50 படகோட்டிகளுக்கு MPKS பயிற்சி
31 மே 2026, 5:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைselangor
உங்கள் கருத்து என்ன?



