புது டில்லி, மே 15 — BRICS நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று கூட்டு அறிக்கை இன்றி முடிவடைந்தது. இதில் எதிர்மறை நிலைப்பாட்டில் உள்ள Iran மற்றும் United Arab Emirates ஆகிய நாடுகளும் பங்கேற்றிருந்தனர். இதனால், மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நாடான இந்தியாவின் , அறிக்கையை மட்டும் வெளியிட்டது. அந்த அறிக்கை உறுப்பு நாடுகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியது.அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியின் ஈரான் மீதான போரை BRICS அமைப்பு கண்டிக்க வேண்டும் என்று தெஹ்ரான் வலியுறுத்தியதுடன், அமெரிக்காவின் கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் மீது நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியது.பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் பலமுறை UAE மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.“மேற்கு ஆசியா / மத்திய கிழக்கு பிராந்திய நிலைமை குறித்து சில உறுப்பு நாடுகளுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தன,” என்று இந்தியா வெளியிட்ட அறிக்கையிலும் முடிவுத் தகவலிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.UAE-ஐ நேரடியாக பெயரிடாமல், ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araqchi செய்தியாளர் சந்திப்பில், BRICS உறுப்பு நாடுகளில் ஒன்றே அறிக்கையின் சில பகுதிகளை தடுத்ததாக தெரிவித்தார்.“அந்த குறிப்பிட்ட நாட்டுடன் எங்களுக்கு பிரச்சினை இல்லை. தற்போதைய போரில் அவர்கள் எங்களின் இலக்கு அல்ல. அமெரிக்க இராணுவத் தளங்களையும் அமெரிக்க இராணுவ அமைப்புகளையும் மட்டுமே நாங்கள் தாக்கினோம். அவை துரதிருஷ்டவசமாக அவர்களது நாட்டில் உள்ளன,” என்றார்.மேலும், “இந்த ஆண்டின் பின்னர் BRICS உச்சி மாநாட்டில் சந்திக்கும் போது நிலைமை மாறும் என்று நம்புகிறேன்.“ஈரான் ஒரு அண்டை நாடு என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நாம் பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துள்ளோம்; இனியும் வாழ வேண்டியதே,” என்றும் அவர் கூறினார்.இந்த விவகாரம் தொடர்பாக UAE வெளிவிவகார அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.இந்தியாவின் அறிக்கையில், உறுப்பு நாடுகள் தங்களது தேசிய நிலைப்பாடுகளை வெளிப் படுத்தியதாகவும், பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில், நெருக்கடிக்கு விரைவான தீர்வு தேவை, உரையாடல் மற்றும் தூதரக முயற்சிகளின் முக்கியத்துவம், இறையாண்மை மற்றும் நில எல்லை ஒருமைப்பாட்டை மதிப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றன.மேலும், சர்வதேச சட்டங்களை மதிப்பது, சர்வதேச கடல் வழித்தடங்களில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வது, பொது மக்களின் உயிர்களையும் அடிப்படை உள் கட்டமைப்புகளையும் பாதுகாப்பது போன்ற அம்சங்களும் விவாதிக்கப் பட்டன.வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைய வேண்டுகோள்அறிக்கையில், BRICS அமைச்சர்கள் “Gaza Strip ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியின் பிரிக்க முடியாத அங்கம்” என்பதை மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.மேலும், மேற்கு கரையும் காசா பகுதியும் Palestinian Authority நிர்வாகத்தின் கீழ் ஒன்றிணைக்கப் பட வேண்டிய அவசியத்தையும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையையும், சுயாதீன பாலஸ்தீன நாடு அமைக்கும் உரிமையையும் உறுதி படுத்தியதாக தெரிவிக்கப் பட்டது.ஆனால், காசா தொடர்பான பிரிவின் சில அம்சங்கள் குறித்து ஒரு உறுப்பு நாடு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அந்த நாடு பெயரிடப் படவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.2026 ஆம் ஆண்டுக்கான BRICS தலைமை நாடாக உள்ள இந்தியா வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய சவால்களை சமாளிக்க வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென உறுப்பினர்கள் அழைப்பு விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.“நல்ல மாற்றத்திற்கான இயக்க சக்தியாக ‘Global South’ முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் புவியியல் அரசியல் பதற்றம், பொருளாதார மந்தநிலை, தொழில்நுட்ப மாற்றங்கள், பாதுகாப்பு வர்த்தகக் கொள்கைகள் மற்றும் குடியேற்ற அழுத்தங்கள் போன்ற சர்வதேச சவால்களை உலகம் எதிர் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.BRICS அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிகா, எத்தியோப்பியா, எகிப்து, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் கூட்டாளர் நாடுகளாக உள்ளன.மேற்கு ஆசிய மோதலின் இந்தியா மீதான தாக்கம்உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடான இந்தியா, Strait of Hormuz வழியாக ஈரான் ஏற்படுத்திய செயல்திறன் கொண்ட தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண சூழலில், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஐந்தில் ஒரு பகுதி இந்த கடல் வழித்தடம் வழியாக செல்கிறது.இந்த நீர் வழியில் ஈரானிய தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்களில் குறைந்தது மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அராக்சி டெல்லிக்கு பயணம் செய்திருந்த வேளையில், இந்தியக் கொடி ஏந்திய ஒரு கப்பலும் இந்த வாரம் மூழ்கடிக்கப்பட்டது.இன்று UAE-க்கு மேற்கொண்ட குறுகிய பயணத்தின் போது, இந்திய பிரதமர் Narendra Modi வளைகுடா நாட்டின் மீதான தாக்குதல்களை கண்டித்தார்.“UAE மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை,” என்ற அவர், “இந்த கடினமான சூழ்நிலையில் நீங்கள் காட்டிய பொறுமையும் துணிச்சலும் மிகவும் பாராட்டத்தக்கவை,” என்றும் தெரிவித்தார்.
ஈரான் போர் விவகாரத்தில் கருத்து வேறுபாடு: கூட்டு அறிக்கையின்றி முடிந்த BRICS பேச்சுவார்த்தை
16 மே 2026, 3:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka




