சுபாங் ஜெயா தொகுதியில் 297 சிறந்த SPM மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

10 மே 2026, 1:37 AM
சுபாங் ஜெயா தொகுதியில் 297 சிறந்த SPM மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

சுபாங் ஜெயா, மே 9:  சுபாங் ஜெயா   மாநில சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து Sijil Pelajaran Malaysia (SPM) தேர்வில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 297 மாணவர்களின் கல்விச் சாதனையைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

மிஷேல் இங் மெய் ஸ்ஸே  சுபாங் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில், 2023–2025 SPM சிறந்த பெறுபேறு விருது திட்டத்திற்காக மொத்தம் RM39,910 ஒதுக்கப் பட்டதாக தெரிவித்தார்.

“6A முதல் 10A மற்றும் அதற்கு மேற்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த முயற்சி மாணவர்களின் உழைப்பை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் தொடர்ந்து வெற்றி பெற அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

“இந்த திட்டம் மாணவர்கள் கல்வியில் மேலும் முன்னேறவும், சுபாங் ஜெயாவிற்கும் நாட்டிற்கும் பயனுள்ள குடிமக்களாக உருவாகவும் ஆதரவும் ஊக்கமும் வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்,” என்று அவர் Media Selangor-ரிடம் தெரிவித்தார்.

இன்று Subang Parade-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் 297 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

இதற்கிடையில், ஊக்கத்தொகை பெற்ற 18 வயதான Addeena Jihadi, தன்னை தேர்ந்தெடுத்து இந்த அர்த்தமுள்ள பாராட்டை வழங்கியதற்காக மிகுந்த நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

SMK SS17 முன்னாள் மாணவியான அவர், பள்ளிக் காலத்தில் மேற்கொண்ட உழைப்பு குடும்பத்தினராலும் பள்ளியினராலும் மட்டுமல்லாமல், உள்ளூர் தலைவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறினார்.

“முன்தேர்வில் நான் 5A பெற்றிருந்தேன். ஆனால் 2025 SPM உண்மையான முடிவில் 6A பெற முடிந்தது. ஒரு A மட்டும் கூடினாலும், அது எளிதான விஷயம் அல்ல. அந்த முடிவுக்காக நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்,” என்றார்.

மற்றொரு ஊக்கத்தொகை பெற்ற முகமெட் ஜமிருடின் (Mohamed Jamirudeen), 2025 SPM தேர்வில் சிறந்த பெறுபேறு பெற்றது தனது பெற்றோருக்கு மிக அர்த்தமுள்ள பரிசாக அமைந்ததாக தெரிவித்தார்.

SMK Subang Jaya முன்னாள் மாணவரான அவர், முன்தேர்வில் 3A மட்டுமே பெற்றிருந்தாலும், தொடர்ந்து பயிற்சியும் மறுபயிற்சியும் செய்ததன் மூலம் இறுதியில் 6A பெற முடிந்ததாக கூறினார்.

“இந்த முடிவின் மூலம் என் பெற்றோரை மகிழ்ச்சியடையச் செய்ததில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள், மாணவர்களின் வெற்றியை கொண்டாடுவதில் மக்களவை பிரதிநிதிகளும் அக்கறை காட்டுகின்றனர் என்பதைக் காட்டுகிறது. அது எங்களுக்கு மேலும் வெற்றி பெற உற்சாகத்தையும் தருகிறது,” என்றார்.

SPM 2023–2025 சிறந்த பெறுபேறு விருது திட்டம், மாணவர்களின் கல்விச் சிறப்பை பாராட்டுவதோடு இளைஞர் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

10A மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்கள் RM200, 9A பெற்றவர்கள் RM150, 8A பெற்றவர்கள் RM120, 7A பெற்றவர்கள் RM100 மற்றும் 6A பெற்றவர்கள் RM80 ஊக்கத்தொகையாக பெற்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.