ஷா ஆலம், மே 4: பல்லின கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் முயற்சியாக, விஷு புத்தாண்டு மற்றும் இதர சிறுபான்மை சமூகங்களின் பண்டிகைகளை அடுத்த ஆண்டு முதல் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஆண்டுப்பட்டியலில் சேர்க்க மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பல்லின சமூகங்களின் பன்முகத்தன்மையை வலுப்படுத்தவும், எந்தவொரு சமூகமும் ஓரங்கட்டப்படாமல் உரிய அங்கீகாரத்தைப் பெறுவதை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு தெரிவித்தார்.
"மலையாளி சமூகம் உட்பட எந்தவொரு சமூகமும் விடுபட்டுப் போகாமல் இருப்பதை நான் உறுதி செய்வேன். ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவோம். அடுத்த ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்தின் ஆண்டுப்பட்டியலில் விஷு பண்டிகையைச் சேர்க்க முயற்சிப்போம். ஏனெனில், கலாச்சாரக் கொண்டாட்டங்களை மேலும் சீராகவும் முழுமையாகவும் செயல்படுத்துவதே எனது நோக்கம்," என்றார்.
தாமான் ஸ்ரீ மூடா, செக்ஷன் 25-இல் உள்ள டேவான் அசாலியாவில் நடைபெற்ற மாநில அளவிலான விஷு பண்டிகைக் கொண்டாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இவ்விழாவில், மலையாள சங்கத்தின் தலைவர்கள் மற்றும் மாநிலம் முழுவதிலுமிருந்து சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பாராய்டு, இந்திய சமூகத்தில் உள்ள துணை இனங்களின் தனித்துவமான அடையாளத்தையும், அவர்களின் பாரம்பரியங்களையும் எடுத்துக்காட்டுவதில் இத்தகைய நிகழ்ச்சிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
"இந்திய சமூகத்தில் வைசாகி, உகாதி, புத்தாண்டு போன்ற பல தனித்துவமான கொண்டாட்டங்கள் உள்ளன. அதேபோல் மலையாளி சமூகத்தினரின் புத்தாண்டான விஷுவும் கொண்டாடப்படுகிறது."
“மலையாளி சமூகம் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும், அவர்களின் மொழி, எழுத்து மற்றும் நடனக் கலைகள் மிகவும் தனித்துவமானவை. அவை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காண முடியாதவை,” என்று அவர் கூறினார்.
தற்போது ஒதுக்கப்படும் நிதி சிறிய அளவில் இருந்தாலும், எதிர்காலத்தில் தேவைக்கேற்ப இந்த ஒதுக்கீடு மேம்படுத்தப்படும் என்று பாப்பாராய்டு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், கலாச்சாரக் கொண்டாட்டங்களை விரிவுபடுத்தும் இந்த முயற்சி, மலேசியா மடாணி கொள்கைக்கு ஏற்ப ஒற்றுமையை மக்களிடையே வளர்க்கும் ஒரு சமூகப் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான நிதியையும் ஆதரவையும் மேலும் அதிகரிக்க மாநில அரசு வழிமுறைகளை மறுஆய்வு செய்யும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், எங்களின் முக்கிய நோக்கம் நிதி மதிப்பை மட்டும் பார்ப்பதல்ல, மாறாக மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் பண்டிகைகளை ஒன்றிணைந்து கொண்டாடுவதில் அரசாங்கத்தின் நேர்மையே முக்கியம்," என்றார்.
விஷு பண்டிகை அடுத்த ஆண்டு முதல் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஆண்டுப்பட்டியலில் சேர்க்கப்படும் - சிலாங்கூர் அரசு பரிந்துரை
4 மே 2026, 1:43 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பெண் தொழில்முனைவோருக்கு உதவ சிலாங்கூர் ஐந்து வழிமுறைகளை முன்வைத்துள்ளது
Shalini Rajamogun, Yasmin Ramlan
29 ஏப்ரல் 2026

selangor
வறுமை ஒழிப்புத் திட்டங்களால் சிலாங்கூர் மக்களின் மகிழ்ச்சி குறியீடு உயர்வு: மந்திரி புசார்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
29 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் பெட்ரோல், மின்சாரத்தைச் சேமிக்க வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை உதவுகிறது - மந்திரி புசார்
Shalini Rajamogun, Adam Azman
29 ஏப்ரல் 2026

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




