ஷா ஆலம், மே 2: தேசியக் காற்பந்து ஆதரவாளர் குழுவான அல்ராஸ் மலாயா, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தேசிய அணி சம்பந்தப்பட்ட அனைத்துப் போட்டிகளையும் முதல் கட்டமாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13-ஆம் தேதி தாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளின் தொடர் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்குழு தெரிவித்தது.
ஆவணப் போலியாக்கிய விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஏழு வீரர்களின் குடியுரிமையைத் திரும்பப் பெறுவது, ஹரிமாவ் மலாயா நிர்வாகத்தை மீண்டும் மலேசியக் காற்பந்துச் சங்கத்திடம் (FAM) ஒப்படைப்பது மற்றும் நாட்டின் காற்பந்து துறையில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வது ஆகியவையே அந்த மூன்று கோரிக்கைகளாகும்.
தொடர்புடைய தரப்பினர் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆகஸ்ட் 31, 2026 வரை உல்ராஸ் மலாயா காலக்கெடு விதித்துள்ளது.
"இந்த மூன்று கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் ஆகஸ்ட் 31, 2026 வரை அவகாசம் வழங்குகிறோம்."
"குறுகிய நலன்கள், நிர்வாகத் தோல்விகள் மற்றும் நீண்டகாலமாக நீடிக்கும் அமைப்பு ரீதியான சீர்கேடுகளில் இருந்து மலேசியக் காற்பந்து உண்மையிலேயே சுதந்திரம் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்," என்று அந்தக் குழு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், இன்னும் விரிவான இரண்டாம் கட்டப் புறக்கணிப்பை மேற்கொள்ளப் போவதாகவும் அந்தக் குழு எச்சரித்துள்ளது.
அதே வேளையில், எந்த ஒரு தனிப்பட்ட நலன்களிலிருந்தும் நாட்டின் காற்பந்தின் நேர்மையைப் பாதுகாப்பதில் தங்கள் நிலைப்பாட்டை உல்ராஸ் மலாயா மீண்டும் வலியுறுத்தியது.
"எந்த ஒரு தரப்பினரின் அல்லது தனிநபரின் ஆசை, செல்வாக்கு மற்றும் தனிப்பட்ட நலன்களைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாகக் காற்பந்து பயன்படுத்தப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்று அது கூறியது.
இந்தப் புறக்கணிப்பு வெறுப்பினால் தூண்டப்பட வில்லை, மாறாக நாட்டின் காற்பந்தின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முன்னதாக, ஏழு வீரர்களின் போலி ஆவண வழக்கை அடுத்து, அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) மலேசியக் காற்பந்துச் சங்கத்திற்கு (FAM) 350,000 சுவிஸ் ஃப்ராங்க் (ரிம1.8 மில்லியன்) அபராதம் விதித்தது. சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு தலா 2,000 சுவிஸ் ஃப்ராங்க் (ரிம10,650) அபராதம் விதிக்கப்பட்டு, 12 மாதங்களுக்குப் போட்டிகளில் பங்கேற்கத் தடையும் விதிக்கப் பட்டது.
ஃபகுண்டோ கார்செஸ், ரொட்ரிகோ ஹோல்காடோ, இமானோல் மச்சுகா, ஜோவா ஃபிகியூரிடோ, கேப்ரியல் பால்மெரோ, ஜான் இராசபல் மற்றும் ஹெக்டர் ஹெவல் ஆகியோரே சம்பந்தப்பட்ட ஏழு வீரர்கள் ஆவர்.
அல்ட்ராஸ் மலாயா அதிரடி: ஹரிமாவ் மலாயா போட்டிகளைப் புறக்கணிக்க முடிவு
2 மே 2026, 2:23 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




