கோத்தா பாரு, ஏப்ரல் 18: சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையம் (LTSIP), குறிப்பாக தெற்கு தாய்லாந்து சந்தைக்கான ஒரு மூலோ-பாய வட்டார மையமாக மேம்படுத்தப்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சரியான மூலோபாயத் திட்டமிடல் மூலம், சிங்கப்பூர், ஜகார்த்தா (இந்தோனேசியா) மற்றும் பாங்காக் (தாய்லாந்து) போன்ற முக்கிய நகரங்களுக்கு LTSIP-யிலிருந்து சர்வதேசப் போக்குவரத்து வலையமைப்பைத் திறப்பது கிளாந்தானுக்குப் பெரும் பொருளாதாரப் பலன்களைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.
நிதியமைச்சருமான அன்வார், இத்தகைய போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஆதரிப்பதில் ஒரு திறந்த அணுகுமுறை உள்ளூர் மக்களுக்கு நன்மை அளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றார்.
"இந்த வசதியைப் பயன்படுத்தும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை அதிகரிக்க இது ஒரு தேவையாகும்."
"நாம் சிறிது கவனமும் ஒருமுனைப்பும் காட்டினால் கிளாந்தானில் உள்ள ஆற்றல் ஓரங்கட்டப்படவோ அல்லது புறக்கணிக்கப் படவோ வாய்ப்பில்லை," என்று அவர் இன்று இங்கு LTSIP-யின் புதிய முனையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றும் போது கூறினார்.
இந்தத் துரித நடவடிக்கை உள்ளூர் பொருளாதாரத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சிப் போக்குக்கு ஏற்ப கிளாந்தானை சரியான பாதையில் கொண்டு செல்லும் என்றும் அன்வார் கூறினார்.
440 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள LTSIP திட்டத்தின் சுமூகமான செயல்பாட்டையும் வெற்றியையும் உறுதி செய்வதில் மத்திய அரசுக்கும் கிளாந்தான் மாநில அரசுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்.
ஓடுபாதையை நீட்டிப்பதற்கான செலவைக் கணக்கில் கொண்டால், கிட்டத்தட்ட அரை பில்லியன் ரிங்கிட் செலவாகும் இந்தப் பெரிய அளவிலான திட்டம், அது செயல்படுத்த முடிவு செய்யப்பட்டபோது பொருளாதாரக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட போதிலும், நாட்டிற்கான அதன் மூலோபாய மதிப்பைக் கருத்தில் கொண்டு தொடரப்பட்டது என்று பிரதமர் விளக்கினார்.
மக்களுக்கு நன்மை பயக்கும் பட்சத்தில், எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு யதார்த்தமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது என்று அன்வார் கூறினார்.
"அதற்குப் பின்னால் சில கருத்துக்கள் இருந்தாலும், நாங்கள் (அரசாங்கம்) மிகவும் யதார்த்தமான அணுகுமுறையைக் கையாள்கிறோம். தேவை மற்றும் நல்ல பேச்சுவார்த்தைகள் இருக்கும்போது, நாங்கள் தொடர்கிறோம்," என்றார் அவர்.
"அதனால்தான், மத்திய அரசாங்கத்தின் சார்பில், இந்தத் திட்டத்தை வெற்றிகரமா- க்குவதில் முழு ஒத்துழைப்பை வழங்க மாநில அரசாங்கத்தின் முழு இயந்திரத்தையும் இயக்கிய எனது நண்பர், மந்திரி புசார் (டத்தோ முகமட் நசுருடின் டாட்) அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை வெற்றிகரமாக முடித்தது ஒரு தொடக்கப் படி மட்டுமே என்றும், "அழகான கட்டிடங்களைக் கட்டுவதோடு" நின்றுவிடக் கூடாது என்றும் அன்வார் கூறினார்.
வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் ஒருங்கிணைப்பின் மூலம் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்து-வதற்கான தொடர் நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் இயந்திரங்களை அவர் வலியுறுத்தினார்.
"மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நாம் அடிக்கடி சந்திப்புகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதைப் போலவே, நமது அடுத்த தேவை தொடர் நடவடிக்கை என்பதை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கூற விரும்புகிறேன்," என்று அன்வார் கூறினார்.
LTSIP-யின் மேம்பாட்டிற்காக போக்குவரத்து அமைச்சு மற்றும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) ஆகியவற்றுக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த விமான நிலையத்தை ஒரு அசாதாரணமான விமான நிலையம் என்று அவர் விவரித்தார்.
"இந்த விமான நிலையம் அழகான, நவீன மற்றும் கலை அம்சம் கொண்ட ஒன்றாகும். இஸ்லாமிய மற்றும் மலாய் கலையுடன் கூடிய விமான நிலையத்தைப் பார்க்க விரும்பினால், கோத்தா பாருவுக்கு வாருங்கள்," என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் முகமட் நசுருடின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பயணிகளின் செயல்திறன் மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காக, LTSIP-யில் 20-க்கும் மேற்பட்ட விமானப் பயணச் சரிபார்ப்பு கவுண்டர்கள், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், வாடகை ஊர்தி ஓட்டுநர்களுக்கான சிறப்புப் பாதை, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், விமான நிறுத்துமிடங்களின் விரிவாக்கம் மற்றும் ரொக்கமில்லாச் செயல்பாட்டு முறை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் பயணிகள் என்ற முந்தைய திறனோடு ஒப்பிடுகையில், நான்கு மில்லியன் பயணிகள் வரை கையாளும் திறன் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திறன் அதிகரிப்புடன், முனையம் 12,000 சதுர மீட்டரிலிருந்து 36,000 சதுர மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய தளவமைப்பில், நெரிசலைக் குறைக்க மேல் தளத்தில் புறப்பாடு அரங்கும், கீழ் தளத்தில் வருகை அரங்கும் பிரிக்கப்பட்டுள்ளன.
விமான நிறுத்துமிடங்களின் (ஏப்ரான்) எண்ணிக்கையும் ஐந்து அலகுகளிலிருந்து 11 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேம்படுத்தல் செயல்முறைக்கு முன்பு 350 இடங்கள் மட்டுமே இருந்த வாகன நிறுத்துமிடம் இப்போது சுமார் 1,300 இடங்களை வழங்குகிறது.
இந்த வசதி, குறிப்பாக Aidilfitri போன்ற உச்சக்காலங்களில், பயணிகளை ஏற்றி இறக்கும் செயல்முறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
தெற்கு தாய்லாந்து சந்தைக்கான ஒரு மூலோ-பாய வட்டார மையமாக மேம்படுத்தப்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது, கோத்தா பாரு விமான நிலையம்.
18 ஏப்ரல் 2026, 7:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு 16 வயது குறைந்தபட்ச வரம்பு குழந்தைகளின் டிஜிட்டல் அணுகலைத் தடுக்கும் முயற்சியாகக் கருதப்படக்கூடாது.
Pakiya
26 ஏப்ரல் 2026

national
டீசல் மானியம் மும்மடங்கு உயர்வு, மாதம் ஒன்றுக்கு RM2.2 பில்லியனை எட்டியது
Pakiya
5 ஏப்ரல் 2026

national
சாலை விபத்தில் தந்தையை இழந்த இரண்டு சிறுவர்களை யாயாசான் பெலாஜாரான் மாரா கல்விப் பாதுகாவலராக ஏற்றுக் கொண்டுள்ளது
Pakiya
1 ஏப்ரல் 2026

national
BUDI95 தகுதியை சரிசெய்ய', மானிய விலையிலான RON95 யை RM1.99 நீட்டிக்கும் செயல், அரசு மக்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது
Pakiya
30 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




