பி.எல்.கே.என் 3.0: 1,350-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பு, மூன்று முகாம்கள் முழு கொள்ளளவை எட்டின

25 ஏப்ரல் 2026, 10:35 AM
பி.எல்.கே.என் 3.0: 1,350-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பு, மூன்று முகாம்கள் முழு கொள்ளளவை எட்டின

கோலாலம்பூர், ஏப்ரல் 25: தேசிய சேவை பயிற்சித் திட்டம் (பி.எல்.கே.என்) 3.0 தொடர் 2/2026-க்காக இன்று சுமார் 1,350 பயிற்சியாளர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதோடு, மூன்று பயிற்சி முகாம்கள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தேசிய சேவை பயிற்சித் துறையின் (ஜே.எல்.கே.என்) தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் டத்தோ மர்சுகி மொக்தார், பயிற்சியாளர்கள் பதிவு செய்யும் செயல்முறை இன்று சீராகவும் ஒழுங்காகவும் நடைபெற்றதா-கக் கூறினார்.

"ePLKN அமைப்பு மூலம் பெறப்பட்ட பதிவுகளின் அடிப்படையில், இந்தத் தொடருக்கு 1,350 பயிற்சியாளர்கள் தங்கள் வருகையை உறுதிப்
படுத்தியுள்ளனர்."

“அந்த எண்ணிக்கையில், பகாங், பெக்கானில் உள்ள தேசிய சேவை பயிற்சி முகாம் (சி.எல்.கே.என்) 505 (AW)-இல் 500 பயிற்சியாளர்களும், கோலாலம்பூரில் உள்ள சி.எல்.கே.என் 515 (AW) முகாமில் 250 பயிற்சியாளர்களும், போர்ட்டிக்சனில் உள்ள மல்பார்ட் கிராம (Malbatt Village) சி.எல்.கே.என் முகாமில் 600 பயிற்சியாளர்களும் தங்க வைக்கப்
படுவார்கள்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மல்பார்ட் கிராமத்தில் புதிய முகாம் சேர்க்கப்
பட்டதன் மூலம், ஜே.எல்.கே.என் பயிற்சியாளர்களைச் சேர்ப்பதற்கான திறனை அதிகரித்துள்ளது என்றும், இதன் மூலம் இந்த ஆண்டு படிப்படியாக அதிக இளைஞர்கள் பி.எல்.கே.என் 3.0-இல் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“இந்த முழு கொள்ளளவு, நாட்டுப்பற்று, நேர்மை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கத் தயாராக உள்ள ஒரு இளம் தலைமுறையை உருவாக்குவதில் உள்ள நமது கூட்டு அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது."

“இது, பி.எல்.கே.என் 3.0 இளைஞர்கள் மற்றும் பெற்றோரிடையே தொடர்ந்து பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும் ஒழுக்கமும், மனவுறுதியும் கொண்ட இளைய தலைமுறையை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு சமூகத்தில் உள்ள நம்பிக்கையையும் இது பிரதிபலிக்கிறது,” என்றார் அவர்.

மல்பார்ட் கிராமம், பி.எல்.கே.என் 3.0 தொடர் 2/2026 பயிற்சியாளர்களுக்கான ஒரு தற்காலிக முகாமாகச் செயல்பட்டாலும், பயிற்சியாளர்
வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜே.எல்.கே.என் பெற்றோருக்கு உறுதியளிப்ப-தாக மர்சுகி கூறினார்.

“அதற்கேற்ப, ஒவ்வொரு தங்கும் விடுதியிலும் மூடியசுற்று தொலைக்காட்சி (சிசிடிவி) பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிற ஆதரவு வசதிகள் உட்பட பல்வேறு வசதி மேம்படுத்தல் நடவடிக்கைகளை ஜே.எல்.கே.என் ஆரம்ப கட்டத்திலிருந்தே செயல்படுத்தியுள்ளது."

“இந்த முயற்சி, பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் உகந்த பயிற்சிச் சூழலை உறுதி செய்வதோடு, திட்டம் நடைபெறும் காலம் முழுவதும் பயிற்சியின் செயல்
திறனை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.

இந்த வசதி முதலில் இராணுவக் குடும்ப இல்லமாக (RKAT) கட்டப்பட்டது என்றும், பின்னர் சிறப்புப் பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விரிவாக மாற்றியமைக்கப்
பட்டது என்றும் அவர் கூறினார்.

"லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் (UNIFIL) கீழ் அமைதி காக்கும் பணியில் சேர லெபனானுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, படை ஒருங்கிணைப்பு பயிற்சியில் (FIT) ஈடுபடும் உறுப்பினர்களுக்கான மையமாகவும் இது செயல்
படுகிறது."

"ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் பணியாற்றும் நாட்டின் மாவீரர்கள் தங்கியிருந்த இடம் இந்த வசதி என்பதால், இங்கு தங்க வைக்கப்படும் பி.எல்.கே.என் 3.0 பயிற்சியாளர்கள் பெருமைப்
பட வேண்டும். நாட்டின் உண்மையான மாவீரர்களின் உத்வேகத்தையும் semangat-ஐயும் கொண்டு, 45 நாட்கள் பயிற்சியின் போது அவர்கள் தொடர்ந்து உற்சாகமாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது," என்று அவர் கூறினார்.

போர்ட்டிக்சன், பத்து 5-இல் அமைந்துள்ள மல்பார்ட் கிராம முகாம் 2,980 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கூட்டுப் படைகளின் தலைமையகத்திற்கு (MK AB) சொந்தமான ஒரு முக்கிய வசதியாகும், இது டிசம்பர் 10, 2016 அன்று முன்னாள் 18-வது இராணுவப் படைத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ சுல்கிஃபெலி முகமட் சின் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

வரவிருக்கும் பயிற்சித் தொடர்களுக்கு, குறிப்பாக 2008-இல் பிறந்த வருங்காலப் பயிற்சியாளர்கள், துறையின் அதிகாரப்பூர்வ அலைவரிசைகளில் வெளியாகும் அறிவிப்புகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு ஜே.எல்.கே.என் நினைவூட்டுகிறது. மேலதிக தகவல்களை
https://jlkn.mod.gov.my என்ற இணையதளத்தில் பெறலாம்.



உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.