ஷா ஆலம், ஏப்ரல் 21: பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர், ஜமாலியா ஜமாலுடின், சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைப் பார்வையிட களமிறங்கினார்.
இந்த சம்பவத்தால் கம்போங் காயூ அரா, கம்போங் செம்பாக்கா மற்றும் SS4D உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.
தனது சேவை மையக் குழுவினருடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அடையாளம் காணும் பணியில் ஈடு பட்டதாக ஜமாலியா கூறினார்.
"நிலைமையை நேரில் கண்டறிந்து, பாதிக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் தகுந்த உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் களமிறங்கினோம்," என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து உதவுவதிலும், அவர்களின் நலன் எப்போதும் கவனத்தில் கொள்ளப் படுவதை உறுதி செய்வதிலும் தனது தரப்பு உறுதியாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பொது மக்களும் உதவி பெற பண்டார் உத்தாமா சட்டமன்ற சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக அங்கு செல்லலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கம்போங் காயூ அரா, கம்போங் செம்பாக்கா மற்றும் SS4D உள்ளிட்ட புயல் மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் விஜயம்
21 ஏப்ரல் 2026, 10:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




