ஷா ஆலம், ஏப்ரல் 18: போக்குவரத்து நெரிசலின் தாக்கத்தைக் குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டைச் சேமிக்கவும் அதிகாலை 3 மணி முதல் திடக்கழிவு சேகரிப்புப் பணிகளைச் செயல்படுத்துவது குறித்து கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் (KDEBWM) நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
இந்த நடவடிக்கை, குப்பை சேகரிப்புப் பணிகள் முழுவதும் லாரிகளின் இயக்கத்தை எளிதாக்குவதோடு, செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் என்று கேடிஇபிடபிள்யூஎம் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் கூறினார்.
"உதாரணமாக, அதிகாலை 3 மணிக்கே சேகரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, லாரிகள் தடையின்றி இயங்குவதை உறுதிசெய்ய முடியும்," என்றார்.
"முன்னதாக, குப்பை சேகரிப்புப் பணிகள் காலை 5 மணியளவில் பணிமனையில் இருந்து தொடங்கும். லாரிகள் முதலில் வணிகப் பகுதிகளுக்கும், பின்னர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் செல்லும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக லாரிகளின் இயக்கம் மெதுவாகவும், அடிக்கடி நிறுத்தப்பட வேண்டியும் இருப்பதால், டீசல் பயன்பாடு அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"குப்பை சேகரிப்பு அட்டவணையை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக மாற்றுவது பொருத்தமானதா என்பதைத் தீர்மானிக்க, இந்த சோதனை முயற்சியை ஒன்று முதல் இரண்டு மாத காலத்திற்குள் நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம்," என்றார் அவர்.
இதற்கிடையில், அதிகாலை சேகரிப்புப் பணிகளை மிகவும் சீராகவும் திறமையாகவும் மேற்கொள்ள, பொதுமக்கள் இரவிலேயே குப்பைகளை வெளியே வைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
உலகளாவிய பதட்டங்கள் காரணமாக, கழிவு சேகரிப்பு நடவடிக்கைகளுக்காக கேடிஇபிடபிள்யூஎம் ஒவ்வொரு மாதமும் 4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான டீசல் செலவு உயர்வைத் தாங்க வேண்டியிருந்தது என்று கடந்த ஏப்ரல் மாதம் ரம்லி கூறியிருந்தார்.
60 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்த உயர்வால், மாதாந்திர செயல்பாட்டுச் செலவு முன்பு சுமார் 6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட 10 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த திடீர் செலவு உயர்வு, தினசரி இயங்கும் சுமார் 1,300 கேடிஇபிடபிள்யூஎம் லாரிகளின் செயல்பாட்டிற்கு பெரும் அழுத்தத்தை அளிக்கிறது. இது கழிவு மேலாண்மை அமைப்பின் செயல்திறனுக்கும், சேவையின் தொடர்ச்சிக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகாலை 3 மணி முதல் திடக்கழிவு சேகரிப்புப் பணிகளைச் செயல்படுத்துவது குறித்து - நிறுவனம் ஆய்வு
18 ஏப்ரல் 2026, 5:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
டீசல் சேமிப்புக்கு முக்கியத்துவம்: குப்பை சேகரிப்பு அதிகாலை 5 மணி முதல் தொடங்கப்படலாம் - KDEBWM
Pakiya, Norrasyidah Arshad
4 ஏப்ரல் 2026

national
நாட்டில் ஒரே கழிவு மேலாண்மை நிறுவனத்தை அமைக்க ஊராட்சி அமைச்சு திட்டம்
Rajah Ramaya
21 ஆகஸ்ட் 2025

---
Eksklusif bersama Exco Selangor- Ean Yong Hian Wah
Unknown Author
16 பிப்ரவரி 2016

national
குப்பைகள் அகற்றும் பணிகள் தடையின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய கழிவு மேலாண்மை நிறுவனத்திற்குக் கூடுதல் நிதி தேவை
Shalini Rajamogun
6 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




