ஷா ஆலம், ஏப்ரல் 13 – கிள்ளான் பகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் முயற்சியாக, 13 வெள்ளத் தடுப்புத் திட்டங்களை (RTB) செயல்படுத்துவதற்காக சிலாங்கூர் மாநில அரசு ரிம 990.41 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
டத்தோ மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், இந்த நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கு (ஜேபிஎஸ்) வழங்கப்பட்டுள்ளது என்றார்.
"வெள்ளம் ஏற்படுவதற்கான மூல காரணங்கள், வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் நீர் இருப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஆராயும் சிலாங்கூர் நீர் பெருந்திட்டத்தின் (Selangor Water Master Plan) மேம்பாட்டை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.
"ஒவ்வொரு ஆண்டும் சவால்கள் அதிகரித்து வருவதால், படிப்படியான தீர்வுகளை மட்டும் நாம் சார்ந்திருக்க முடியாது," என்று 'தி ஸ்டார்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் மேலும் கூறுகையில், தற்போது 7.3 மில்லியனை எட்டியுள்ள மக்கள்தொகை வளர்ச்சிக்குக், கிள்ளான், ஷா ஆலம், சுபாங் ஜெயா மற்றும் பெட்டாலிங் ஜெயா போன்ற முதிர்ந்த நகரங்களின் தாக்குப்பிடிக்கும் திறனை சிலாங்கூர் வலுப்படுத்த வேண்டும்.
"இந்த நான்கு நகரங்களிலும் மாநிலத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் வசிக்கின்றனர். எனவே, மக்கள் மீதான வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்க, சிலாங்கூர் அதிகரித்து வரும் மழைப்பொழிவுக்கு ஏற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்," என்றார்.
கரைகள் கட்டுதல், கடக்கும் மதகுகள், தடுப்புக் குளங்கள் அமைத்தல், மற்றும் நீர் கட்டுப்பாட்டு கதவுகள் மற்றும் உயர் திறன் கொண்ட பம்புகளைப் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைச் சிலாங்கூர் ஜேபிஎஸ் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
ரிம 990.41 மில்லியன் செலவில் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு - மாநில அரசு
13 ஏப்ரல் 2026, 8:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில், எய்டில்ஃபிட்ரிக்கு முன்னதாக ஒற்றுமையையும் மிதவாத்த்தையும் எம். பி வலியுறுத்தினார்
Pakiya
17 மார்ச் 2026

selangor
சிலாங்கூரின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் புறக்கணிக்காது – மந்திரி புசார்
Shalini Rajamogun
9 மார்ச் 2026

national
சுக்மா போட்டி 2026: தன்னார்வலர் பதிவுக்கான ஆதரவு சிறப்பாக உள்ளது
Shalini Rajamogun
9 மார்ச் 2026

selangor
சிலாங்கூரில் பன்றி வளர்ப்பு முற்றாக நிறுத்தம்: சுல்தானின் ஆணைக்கு மாநில அரசு இணக்கம்
Mavitthran
12 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




