புலாவ் கெத்தாம் கடல் பகுதியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்: கடத்தல், குற்றச்செயல்களைத் தடுக்க நடவடிக்கை

12 ஏப்ரல் 2026, 9:26 AM
புலாவ் கெத்தாம் கடல் பகுதியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்: கடத்தல், குற்றச்செயல்களைத் தடுக்க நடவடிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 12: புலாவ் கெத்தாம் (Pulau Ketam) கடல் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் மற்றும் இதர குற்றச்செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில், தென் கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைமையகம் தனது ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கடற்கரை ஓரப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, சட்டவிரோத ஊடுருவல்களைக் கண்காணிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புலாவ் கெத்தாம் காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் 'PAC 494' ரக ரோந்துப் படகைப் பயன்படுத்தி இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

சார்ஜன் முகமது சுஹைமி அப்துல் சுகோர் தலைமையிலான இந்த ரோந்துப் குழு, கடற்கரை ஓரங்களில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் உள்ளனவா என்பதைக் கண்காணித்தனர்.

காவல்துறையின் இந்தத் தொடர் நடவடிக்கை அப்பகுதியில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க உதவும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், அவசரக் காலங்களில் பயன்படுத்துவதற்காகப் காவல்துறை சொத்துக்கள் மற்றும் ரோந்துப் படகுகள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதையும் இந்த அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் சமூகத்தினருடன் காவல்துறையினர் கலந்துரையாடினர். குறிப்பாக, மீன் கூண்டுகளைப் பராமரிக்கும் உரிமையாளர்களுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காவல்துறையின் இந்தத் திடீர் ஆய்வு மற்றும் சமூக அணுகுமுறைக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இது போன்ற தொடர்ச்சியான ரோந்துப் பணிகள், கடற்கரை ஓரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, காவல்துறை படை மீதான அவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.