கெய்ரோ, 30 மார்ச்: ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, எகிப்து ஒரு மாத காலத்திற்கு எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை-களை அமல்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் கடைகள், உணவகங்-கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு மூடுவது அடங்கும். இருப்பினும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழ- மைகளில் இரவு 10 மணி வரை செயல்பட அனு- மதிக்கப்படும் என்று பிரதமர் மொஸ்டாஃபா மட்த்பௌலியின் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது என அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், சாலை விளக்குகளைக் குறைத்தல், விளம்பரப் பலகைகளின் ஒளியை 50 விழுக்-காடு குறைத்தல், மற்றும் அரசாங்க வாகனங்க-ளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 30 விழுக்-காடு குறைத்தல் போன்ற நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
புதிய நிர்வாகத் தலைநகரில் உள்ள அரசாங்க நிர்வாகப் பகுதிகளை மாலை 6 மணிக்கு மூடுவதற்கும், அதிக அளவில் டீசல் பயன்படுத் தும் முக்கிய தேசியத் திட்டங்களை இரண்டு மாதங்களுக்கு மெதுவாக்குவதற்கும் அதிகாரி-கள் முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஏப்ரல் 1 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையையும் இந்த நடவடிக்கைகள் உள்ளடக்கியுள்ளன.
கெய்ரோ மற்றும் கிசா மாகாணங்களில் நைல் நதிக்கரையில் அமைந்துள்ள மருந்தகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் சுற்றுலா வசதிகள், அத்துடன் தெற்கு சினாய், லக்சர், அஸ்வான், ஹுர்காதா மற்றும் மர்சா ஆலம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு இந்த நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
"உலகளாவிய எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்தி இறக்கு-மதி செலவுகளின் தாக்கத்தைக் குறைப்பதை இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டு-ள்ளன," என்று மட்த்பௌலி சனிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
எகிப்தின் எரிசக்தி இறக்குமதி செலவு ஜனவரி 1.2 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மார்ச் மாதத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய எண்ணெய் விலை உயர்வின் காரணமாக எகிப்தின் எரிசக்தி இறக்குமதி செலவில் ஏற்பட்ட அதிகரிப்பில், அரசாங்கம் சமீபத்தில் அமல்படுத்திய எரிபொருள் விலை உயர்வு மூன்றில் ஒரு பங்கை மட்டுமே ஈடுகட்டு-வதாகவும் அவர் கூறினார்.
கடந்த மார்ச் 10 அன்று, உலகளாவிய எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, எகிப்தின் பெட்ரோலிய அமைச்சகம் எரிபொருள் விலை- யை 14 முதல் 30 விழுக்காடு வரை உயர்த்துவதாக அறிவித்தது.
எண்ணெய் விலை உயர்வு- எகிப்த்தின் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது.
30 மார்ச் 2026, 12:13 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Selangor giat pelbagaikan tenaga, hadapi kesan konflik Asia Barat
Kathiravan Manoharan
16 ஏப்ரல் 2026

national
நாட்டின் எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது - பிரதமர் உத்தரவாதம்
Pakiya
7 ஏப்ரல் 2026

sukankini
2025 எகிப்து பொது ஸ்குவாஷ் போட்டியிலிருந்து சிவசங்கரி வெளியேறினார்
Shalini Rajamogun
19 செப்டெம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




