ரவாங் பெர்டானாவில் ஆலயக் கட்டிடம் இடிப்பு; முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்- மாண்புமிகு பாப்பாராய்டு  அறிக்கை 

12 பிப்ரவரி 2026, 8:37 AM
ரவாங் பெர்டானாவில் ஆலயக் கட்டிடம் இடிப்பு; முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்- மாண்புமிகு பாப்பாராய்டு  அறிக்கை 

ஷா ஆலம், பிப் 12 - சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மாவட்டத்தின் ரவாங் பெர்டானாவில் உள்ள ஆலய இடிப்பு சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ஆலய இடிப்பு சம்பவத்தை அடுத்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.

ரவாங் பெர்டானாவில் உள்ள யாயாசான் குப்ரா நிலத்தில் ஒரு கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவத்தை சிலாங்கூர் மாநில அரசு தீவிரமாகக் கருதுகிறது.மேலும் இது குறித்து தொழில்முறை, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, யாயாசான் குப்ரா நிலத்தில் உள்ள ஒரு கோவிலை அகழ்வாராய்ச்சி இயந்திரத்தைப் பயன்படுத்தி இடித்த சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கூறினார்.

ஆலய இடிப்பு சம்பவத்தை அடுத்து போலீஸ் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தரப்பு உறுதிப்படுத்தியது

தொடர்புடைய செய்திகள்

ரவாங் ஆலய இடிப்பு சம்பவம்; சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

Mavitthran
12 பிப்ரவரி 2026
ரவாங் ஆலய இடிப்பு சம்பவம்; சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

வழிப்பாட்டு தலங்களைக் கட்டுவதற்கான சட்டத்திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்- மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை

Mavitthran
11 பிப்ரவரி 2026
வழிப்பாட்டு தலங்களைக் கட்டுவதற்கான சட்டத்திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்- மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை

இந்துக்களின் வழிப்பாட்டு தலங்கள் குறித்த வட்டமேசை கலந்துரையாடல்; இந்திய அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்தனர்

Mavitthran
26 பிப்ரவரி 2026
இந்துக்களின் வழிப்பாட்டு தலங்கள் குறித்த வட்டமேசை கலந்துரையாடல்; இந்திய அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்தனர்

பகாங்கில் வழிபாட்டு தலங்களை நிர்மாணிக்கும் போது சட்டத்திட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்- பகாங் சுல்தான் கருத்து 

Mavitthran
25 பிப்ரவரி 2026
பகாங்கில் வழிபாட்டு தலங்களை நிர்மாணிக்கும் போது சட்டத்திட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்- பகாங் சுல்தான் கருத்து 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.