உலக மோதல்களிடையே பெட்ரோனாஸ் மாற்று திட்டங்களை தயார் செய்துள்ளது – துணை பிரதமர்

23 மார்ச் 2026, 2:59 AM
உலக மோதல்களிடையே பெட்ரோனாஸ் மாற்று திட்டங்களை தயார் செய்துள்ளது – துணை பிரதமர்

ஷா ஆலம், மார்ச் 22: உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் மோதல்களால் இடையூறு ஏற்பட்டால், மாற்று ஆற்றல் ஆதாரங்களைப் பெறுவதற்கான பல அவசர (contingency) திட்டங்களை பெட்ரோனாஸ் ஆய்வு செய்து வருகிறது என்று துணை பிரதமர் டத்துக் ஸ்ரீ ஃபதில்லா யூசுப் தெரிவித்தார்.

எனர்ஜி மாற்றம் மற்றும் நீர் மாற்றுத்திறன் அமைச்சராகவும் உள்ள அவர், தேசிய எண்ணெய் நிறுவனம் உலகளாவிய நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து, நாட்டின் உள்நாட்டு ஆற்றல் விநியோகம் நிலைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.

“தற்போதைய மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாக எரிவாயு அல்லது எண்ணெய் விநியோகம் சாத்தியமில்லை எனில், மாற்று ஆதாரங்களை கண்டறிய பெட்ரோனாஸ் பல திட்டங்களை ஆய்வு செய்துள்ளது.“அதே நேரத்தில், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் உள்ள நாடுகளிலிருந்தும் விநியோகத்தை கண்காணித்து வருகிறது.

இத்தகைய அனைத்து மாற்று ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதுவரை திட்டமிடல் நன்றாக நடைபெற்று வருகிறது; எங்கள் விநியோகம் நிலையாக உள்ளது,” என்று அவர் Borneo Post செய்தி மூலம் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, தேசிய ஆற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.விநியோகம் நிலையாக இருந்தாலும், ஆற்றல் சேமிப்பு மிகவும் முக்கியமானது என்று ஃபதில்லா வலியுறுத்தினார்.

“நீரைப் போலவே, ஆற்றலையும் நிதானமாக பயன்படுத்த வேண்டும். தேவையின்றி எரிவாயுவை வீணாக பயன்படுத்தக் கூடாது,” என்றார். அரசு, உள்நாட்டு ஆற்றல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஏர் கண்டிஷனர் பயன்பாட்டுக்கான வழிகாட்டுதல்களும் அடங்கும்.

“அரசு அலுவலகங்களில் ஏர் கண்டிஷனர் பயன்படுத்தினால், அதை சுமார் 24ºC இல் பராமரிக்க வேண்டும். இதனால் எரிவாயு பயன்பாடு குறையும்,” என்றார்.

மேலும், தேவையற்ற பணிகளில் ஈடுபடாத பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

“அத்தியாவசியமற்ற பணிப் பிரிவுகளுக்கான வீட்டிலிருந்து வேலை செய்வதையும் நாம் பரிசீலித்து வருகிறோம்,” என்றார்.பொது மக்களும் தங்களின் பங்கைச் செய்ய வேண்டும் என்று ஃபதில்லா அழைப்பு விடுத்தார்.

“மின்சாரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத போது ஏர் கண்டிஷனர் மற்றும் மின்சார சாதனங்களை அணைத்துவிடுங்கள். தேவையானபோது மட்டுமே பயன்படுத்துங்கள்,” என்றார்.அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் ஆற்றல் வளங்களை திறமையாக பயன்படுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.