பெட்டாலிங் ஜெயா, மார்ச் 17;- பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் ஷம்சுடின் மாமாட் கூறுகையில், ஆரம்பகட்ட சோதனையில் உள்ளூர்வாசியான அந்த நபருக்கு கடந்த கால குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்றார்.
இந்தச் சம்பவத்தில் வேறு நபர்களுக்குத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை மேலதிக விசாரணையில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"சந்தேக நபர் இந்த நடவடிக்கையைத் தனியாக மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. இதுவரை வேறு யாருடைய ஈடுபாட்டிற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை," என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று காலை 10.59 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், கத்தியுடன் இருந்த ஆடவர் ஒருவர் தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சந்தேக நபருக்கும் அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் இடையே ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து அந்த முயற்சி தோல்வியடைந்தது.
அந்தப் போராட்டத்தின் போது பாதுகாப்பு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்தார்.
பின்னர், இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு (PPUM) கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், காலை 11.53 மணியளவில் சந்தேக நபர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பு உறுதி செய்தது.
நேற்று தங்க நகை கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், தனியாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது
17 மார்ச் 2026, 7:41 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





