போர்ட் கிள்ளானில் சமையல் எண்ணெயைப் பதுக்கி வைத்திருந்த வளாகத்தில் கேபிடிஎன் சோதனை

5 மார்ச் 2026, 3:26 AM
போர்ட் கிள்ளானில் சமையல் எண்ணெயைப் பதுக்கி வைத்திருந்த வளாகத்தில் கேபிடிஎன் சோதனை

ஷா ஆலம், மார்ச் 5: போர்ட் கிள்ளானில் பெயரிடப்படாத ஒரு வளாகத்தில் 1 கிலோகிராம் பாலிபேக் சமையல் எண்ணெயைப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில், சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (கேபிடிஎன்) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மற்ற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அந்த வளாகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் அனுமதி, உரிமம் அல்லது விநியோகக் கட்டுப்பாட்டாளரின் செல்லுபடியாகும் அங்கீகாரக் கடிதம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக கேபிடிஎன் தெரிவித்துள்ளது.

“குற்றம் செய்யும் நோக்கத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக அல்லது செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வணிக நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக, 1961 ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது,” என்று கேபிடிஎன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக இலாபம் பெறுவதற்காகக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைக்கும் எந்த தரப்பினருடனும் எந்தவித சமரசமும் செய்யப்படமாட்டாது என அத்துறை வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.