பாகான் டத்தோவில் சுமார் ஆயிரம் இந்திய மாணவர்களுக்குக் கல்வி உதவி வழங்கப்பட்டது

1 மார்ச் 2026, 8:07 AM
பாகான் டத்தோவில் சுமார் ஆயிரம் இந்திய மாணவர்களுக்குக் கல்வி உதவி வழங்கப்பட்டது

பாகான் டத்தோ, மார்ச் 1 — பேராக், பாகான் டத்தோவில் சுமார் ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு RM180,000 மதிப்பிலான கல்வி உதவி வழங்கப்பட்டது.

மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழக நிலை வரை, இந்த மாவட்டத்தில் இந்தியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருவதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

“இனம், மதம், மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக,” அவர் விளக்கினார்.

பாகான் டத்தோவிலுள்ள உத்தான் மெலிந்தாங்கில் நடைபெற்ற கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

— பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.