சபாவில் நிலநடுக்கத்தால் சொத்துக்கள், சாலைகள் சேதமடைந்ததாகப் புகார்கள் இல்லை

24 பிப்ரவரி 2026, 8:06 AM
சபாவில் நிலநடுக்கத்தால் சொத்துக்கள், சாலைகள் சேதமடைந்ததாகப் புகார்கள் இல்லை

கோலாலம்பூர், பிப் 24: நேற்று சபாவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின்போது, சொத்துகள் அல்லது கூட்டாட்சி சாலைகள் தொடர்பான சேதங்கள் குறித்த எந்த புகார்களும் இதுவரை பெறப்படவில்லை என்று பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

“இதுவரை எந்த சேதமும் தொடர்பான புகார்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், நிலைமையை அவ்வப்போது அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

அவர் இந்த கருத்துக்களை மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியத்தில் (CIDB), கட்டுமான செயல் திட்டம் 2026–2030 (CAP30) அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதில் CIDB மலேசியா தலைவர் டத்தோ யூசுப் அப்துல் வஹாப் கலந்து கொண்டார்.

“2017 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து, மலேசிய தேசிய யூரோகோட் 8 இணைப்பு (MS EN 1998-1:2015) குறியீட்டை மலேசியா ஏற்றுக்கொண்டுள்ளது, இது நிலநடுக்க எதிர்ப்புக்கான கட்டமைப்புகளின் வடிவமைப்பில் பயன்படுகிறது,” அவர் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 12.57 மணிக்கு சபாவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது; ஆனால் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படவில்லை. நிலநடுக்க மையம் குடாட்டிலிருந்து மேற்கே 49 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

இது கடந்த 11 ஆண்டுகளில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கங்களில் ஒன்றாகும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.