காஸாவுக்கு அப்பாற்பட்ட நெருக்கடிகளை கையாளும் அமைதிவாரியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி வைத்தார்

23 ஜனவரி 2026, 6:49 AM
காஸாவுக்கு அப்பாற்பட்ட நெருக்கடிகளை கையாளும் அமைதிவாரியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி வைத்தார்

வாஷிங்டன்,ஜன. 23-அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வியாழக்கிழமை அமைதிவாரியத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்த வாரியம், காஸா பகுதிநெருக்கடியை மட்டுமல்லாமல், அப்பகுதிக்கு அப்பாற்பட்ட மற்ற சிக்கல்களையும்கையாள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் (ஐ.நா) இணைந்து செயல்படும் என்று அவர்கூறினார்.

“காஸா இராணுவப் படைகளிடம் இருந்து விடுபட்டு, சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுமேம்படுத்தப் படுவதை உறுதிசெய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்," என்று அவர்குறிப்பிட்டார்.

உலகப்பொருளாதார மன்றத்தின் sidelines-இல் உரையாற்றிய டிரம்ப், "இது ஒரு சிறந்த திட்டம். இங்கிருந்துதான் அமைதி வாரியம் உண்மையில் தொடங்குகிறது. 

காஸாவில் வெற்றி பெற்ற பிறகு, நாம் மற்ற பிரச்சினைகளையும்கையாள முடியும் என்று நான் நம்புகிறேன்," என்றார். இந்த மன்றத்தில்பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

"இது பார்ப்பதற்கு ஒரு  விஷயமாக இருக்கும். நாம் வேறு பல விஷயங்களையும் செய்யலாம். இந்த வாரியம் முழுமையாக உருவாக்கப் பட்டவுடன், நாம் விரும்பும் எதையும்செய்ய முடியும், அதை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செய்வோம்,"என்று அவர்மேலும் கூறினார்.

பல்வேறுநாடுகளின் பிரதிநிதிகள் அந்த அமைப்பின் அடிப்படை ஆவணங்களில் கையெழுத்திட்டனர். 

இருப்பினும்,அந்தவாரியத்தின் ஆணை மற்றும் அதன் சாசனம் குறித்த விவரங்கள் இன்னும்வெளியிடப்படவில்லை. 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.